தாராபுரம், ஜன.11- தாராபுரத்தில் சட்டவிரோதமாக புகையிலை பொருட் களை விற்ற 2 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர் களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். தாராபுரத்தில் பொள்ளாச்சி ரோடு அமராவதி ரவுண் டானா அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட் கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்து றையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப் பகுதிக்கு மாறுவேடத்தில் சென்ற காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட் டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த ராஜஸ்தான் மாநிலம், இஸ் வந்தபுரா பகுதியைச் சேர்ந்த ஜோதாராம் என்பவரது மகன் சௌபரம் (27) மற்றும் தாராபுரம் எம்எஸ்பி நகரை சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் ஹரிபிரசாத் (28) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை யில் வெளிமாநிலங்களில் இருந்து புகையிலை பொருட் களை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவர் களிடம் இருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப டுத்தி சிறையில் அடைத்தனர்.