நாமக்கல், மே 10- 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கள் வெள்ளியன்று வெளியான நிலை யில், வழக்கம்போல இந்த முறையும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற் றுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மார்ச்/ஏப் ரல் 2024 ஆம் ஆண்டில் 296 பள்ளிக ளைச் சார்ந்த 10,147 மாணவர்களும், 9,612 மாணவியர்களும் என மொத்தம் 19,759 பேர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 9,318 மாணவர்களும், 9,159 மாணவியர்களும் என மொத்தம் 18,477 தேர்ச்சி பெற்றுள்ளனர். மாண வர்களின் தேர்ச்சி சதவிகிதம் 91.83, மாணவியர்கள் 95.29 என மொத்தம் 93.51 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை விட 0.53 சதவிகி தம் கூடுதலாகி உள்ளது. கடந்தாண்டு 15 ஆம் இடத்திலிருந்து இந்த ஆண்டு 14 ஆம் இடத்திற்கு நாமக்கல் மாவட்டம் முன்னேறியுள்ளது. மாவட்டத்தில் கடந்தாண்டு 92 பள்ளிகள் 100 சதவிகி தம் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது 104 பள்ளிகள் 100 சதவிகிதம் பெற்றுள்ளன. தேர்வு எழுதியவர்கள் தமிழ் பாடத்தில் 97.91 சதவிகிதம், ஆங் கிலம் 99.61 சதவிகிதம், கணிதம் 98.02 சதவிகிதம், அறிவியல் 97.35 சதவிகி தம் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் 96.57 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரி வித்துள்ளார். தருமபுரி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 232 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 118 தனி யார் பள்ளிகள் என மொத்தம் 350 பள்ளி கள் உள்ளன. இதில் 20 ஆயிரத்து 651 பேர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழு தினர். 9270 மாணவர்கள், 9409 மாணவி கள் என மொத்தம், 18,679 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தருமபுரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவிகிதம் 90.45 ஆகும். கடந்தாண்டு 89.46 சதவிகித மாக இருந்தது. நடப்பாண்டில் 0.99 சத விகிதம் அதிகரித்துள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 108 மையங் களில் 14,710 மாணவர்கள், 15,470 மாண விகள் என மொத்தம் 30,180 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் மாண வர்கள் 13,220 பேர், மாணவிகள் 14,659 பேர் என மொத்தம் 27 ஆயிரத்து 879 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 92.38 ஆகும். மாநில அளவில் 21 ஆவது இடம் திருப்பூருக்கு கிடைத் தது. கடந்த ஆண்டு 93.93 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 11 ஆவது இடத்தை திருப்பூர் பெற்றிருந் தது. இதுபோல் 164 அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 7748 மாணவர்கள், 8114 மாண விகள் என மொத்தம் 15, 862 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 6518 பேர், மாணவிகள் 7397 என மொத்தம் 13,915 பேர் தேர்ச்சி பெற்றனர். 87.73 சத வீதம் பெற்று மாநில அளவில் அரசு பள்ளிகள் அளவில் 26 ஆவது இடத்தை பிடித்தது.
கோவை
கோவை மாவட்டத்தில், 19 ஆயிரத்து 614 மாணவர்கள், 20 ஆயிரத்து 126 மாணவிகள் என 39 ஆயரத்து 740 பேர் தேர்வு எழுதிய நிலையில் 37 ஆயிரத்து 360 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கோவை மாவட்டம் 13 ஆவது இடத்தில் இருந்த தற் போது ஒருபடி முன்னேறி 12 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் 190 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற் றுள்ளது குறிப்பிடதக்கது.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 378 மாணவர்கள், 3 ஆரயித்து 501 மாண வியர் என 6 ஆயிரத்து 879 பேர் தேர்வு எழுதினார்கள். இதில், 2 ஆயிரத்தி 931 மாணவர்கள், 3 ஆயிரத்தி 302 மாணவி யர்கள் என மொத்தம் 6 ஆயிரத்தி 233 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாண வர்கள் 86.77 சதவீதமும், மாணவிகள் 94.32 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 90.61 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த சதவிகி தம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 1.79 சதவிகிதம் அதிகம். இதன் மூலம் நீலகிரி மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 26 ஆவது இடத்தை பிடித்துள்ளது. நீல கிரி மாவட்டத்தில் உள்ள 94 அரசு பள்ளி களில் 2 ஆயிரத்து 639 பேர் தேர்வு எழுதி னர். இதில், 2 ஆயிரத்து 261 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளி மாணவர்கள் 85.68 சதவிகிதம் பேர் தேர்ச்சியடைந்து உள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 12 ஆயிரத்து 404 மாண வர்களும், 12 ஆயிரத்து 422 மாணவிக ளும் தேர்வு எழுதினர். இதில் 11 ஆயி ரத்து 548 மாணவர்களும், 12 ஆயி ரத்து 57 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 605 பேர் தேர்ச்சி அடைந்த னர். 160 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசு பள்ளிகள் 43, நகரவை பள்ளி ஒன்று, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் 5, சுயநிதி பள்ளிகள் 18, மெட்ரிக் பள்ளிகள் 91 மற்றும் நலத்துறை பள்ளிகள் இரண்டு அடங்கும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 24 பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள் ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே மதிப்பெண் பெற்று இரட்டையர்கள் அசத்தல்
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே கணியூரில் இரட்டை குழந்தை களாய் பிறந்த சகோதரிகள் 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் மதிப்பெண் எடுத்துள்ளனர். கணியூர் ஸ்ரீ வெங்கிட கிருஷ்ணா பள்ளியில் படித்து வரும் இரட்டை சகோதிரிகளான ஆயிசா லுபாபா 418-ம், ஆயிசா உமாமா 417-ம் மதிப்பெண் எடுத்துள்ளனர். இவர் களை பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரான ஈஸ்வர சாமி நேரில் சந்தித்து வாழ்த்தினார். இதேபோன்று, நாமக்கல் மாவட்டம், ராசிபுரதைச் சேர்ந்த ரமேஷ் யுவராஜ் – கலைவாணி தம்பதியின் குழந்தைகளான இரட்டையர்கள் அக்ஷயா, அகல்யா. ராசி புரம் வித்யா மந்திரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவிகள் அக்ஷயா, அகல்யா கியோர் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இந்நிலையில், வெள்ளி யன்று வெளியான 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில், இருவரும் 463 என ஒரே மதிப்பெண்களை பெற்று தேர்வாகினர். இரட்டையர்கள் ஒரே பள்ளியில் படித்து ஒரே மதிப்பெண்கள் பெற்ற சம்ப வம் பெற்றோர் மட்டுமின்றி, இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களி டையே ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.