கோவை, நவ. 8- மது அருந்த பணம் இல்லாததால் யானை தந்தம், மான் கொம்புகளை விற்பனை செய்ய முயன்றவர் கோவை தொண்டாமுத் தூரில் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் தொண்டாமுதூர் கெம்பனூர் பகுதியை சேர்ந்தவர் மதன்(29). தனியார் பிளைவுட் நிறுவனத்தில் பணி யாற்றி வருகிறார். இந்நிலையில், அப்பகு தியில் உள்ள மதுபானக் கடைக்கு அருகில் சாக்குப் பையுடன் சுற்றி திரிந்து கொண்டி ருந்த மதன் தன்னிடம் மான் கொம்புகள் மற்றும் யானை தந்தம் இருப்பதாகவும், 500 ரூபாய் கொடுத்தால் அதனை தருவதாகவும் அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார். இத னையடுத்து அங்கிருந்தவர்கள் அவரது சாக்கு பையை பிடுங்கி பார்த்துள்ளனர். அதில் மான் கொம்புகளும் யானை தந்த மும் இருந்துள்ளது. இதனையடுத்து தொண் டாமுத்தூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தொண்டாமுத்தூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் மதனிடம் விசாரணை நடத்தினர். இதில், இவை தனது வீட்டில் இருந்ததாகவும் குடிப்ப தற்கு பணம் இல்லாததால் விற்பனை செய்ய முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். இதனை யடுத்து அவரிடம் இருந்த இரண்டு ,மான் கொம்புகள் மற்றும் ஒரு யானை தந்தத்தை கைப்பற்றிய வனத்துறையினர் மதனை அழைத்து கொண்டு அவரது வீட்டிற்கு சென்று வேறு ஏதேனும் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் மதன் தான் பழங்குடி கிராமத்தி லிருந்து மான் கொம்புகளை வாங்கியதாக கூறியதன் அடிப்படையில் வனத்துறை அலு வலர் அருண் தலைமையிலான வனத்துறை யினர் பழங்குடி கிராமத்தில் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.