நாமக்கல், பிப்.26- பல்லடம் பாஜக பொதுக் கூட்டத்திற்கு வாட்ஸ்அப் குழுவில் மத ரீதியாக பதிவிட்டு, ஆள் பிடிக்கும் வேளையில் பாரதிய ஜனதா கட்சியினர் இறங்கியுள்ள னர். அண்ணாமலையின் என் மக் கள் என் பயணம் நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டம் செவ்வாய்க் கிழமை (இன்று) திருப்பூர் மாவட் டம் பல்லடத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரத மர் மோடி பங்கேற்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, பாரதிய ஜனதா கட்சியினர் எப்படியாவது தங்களது செல்வாக்கை நிருபிக்க வேண்டும் என தலைகீழாக நிற்கின் றனர். அதிலும் குறிப்பாக அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழட்டி விடப்பட்ட பிறகு பல்ல டத்தில் நடைபெறும் கூட்டத்தில் தங்கள் பலத்தை நிரூபிக்க திட்ட மிட்டு வருகிறார்கள். பொதுக் கூட்டத்திற்கான பிரம் மாண்டமான மேடை அமைக்கப் பட்டு, ஏராளமானோர் பங்கேற்கும் வகையில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் போதிய அளவிலான கட்சி கட்டமைப்பு, அடித்தளமோ இல்லா ததால், பல்லடம் பொதுக்கூட்டத் திற்கு ஆட்களை சேர்க்க முடியா மல் தவித்து வருகின்றனர். கட்சி யில் இருக்கிற ஒரு சிலரும், இது தான் வாய்ப்பு என்கிற வகையில், மோடி வருகிறார் ரூ.500 கொடு என வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கட்சியின் தலைவர்களே உட்சத்திற்கே சென்று, பெரும் நிறுவனங்களிடம் அடித்து பிடுங்காத குறையாக லட்சக்கணக்கில் பணத்தை பறித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பெயர் சொல்ல விரும்பாத கிரைனைட் டைல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த உரிமை யாளர் ஒருவர் கூறுகையில், ஐந்து வார்டுக்கு நீங்கள் பொறுப்பெடுத் துக்கொள்ளுங்கள், ஆயிரம் பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் மற்றும் குறிப்பிட்ட இந்த பத்திரி கைக்கு விளம்பரம் கொடுத்து விடுங்கள் என உத்தரவிட்டு ரூ.30 லட்சத்தை பறித்து விட்டு சென்று விட்டதாக புலம்பினார்.
இதுஒருபுறமிருக்க, உள்ளூர் மட்டத்தில் செயல்படும் முக்கிய மான வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் கோவில் விசேஷ நிகழ்வுகளை மட்டும் பகிர்ந்து கொள்ளும் வகை யில் உருவாக்கப்பட்டுள்ள வாட்ஸ அப் குழுக்களில், ஆள் பிடிக்கும் வேளையில் இறக்கியுள்ளனர். அதாவது, பாரத பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் உரை யாற்றுகிறார். அயோத்தி கோவிலை கட்டுவதற்கு பெரும் பங்காற்றிய நாயகன் பாரத பிரத மர் நரேந்திர மோடி பல்லடம் வருகை தருகிறார். எனவே இந்து சொந்தங்கள் அனைவரும் வர வேண்டும் என்ற மத ரீதியிலான வாட்ஸ்அப் பதிவுகளை வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்து வருகின் றனர். மேலும் ஒவ்வொரு பகுதியி லும் பொறுப்பாளர்கள் நியமிக் கப்பட்டு, குறிப்பிட்டு, செல்போன் எண்களையும் அதில் பதிவிட்டு வருகின்றனர். இதனை விரும்பாத கோவில் குழுக்களில் உள்ள நிர்வாகிகள், கோவில் சம்பந்தப் பட்ட வாட்ஸப் குழுவில் தனிப்பட்ட அரசியல் செய்திகளை கட்சி நிகழ் வுகளை பகிர வேண்டாம் என வேண்டுகோள் விடுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தாலுகாவிற்கும் இவ்வளவு பேர் கட்டாயம் வர வேண்டும் என பாஜக மேலிடம் உத்தரவிட்டுள் ளதால், அதிமுக பாணியில், தலைக்கு இவ்வளவு, மதியம், இரவு உணவு உண்டு என பேரம் பேசி ஆட்களை திரட்டி வருகின்ற னர்.