உடுமலைபேட்டை நகராட்சி சிறப்புக் கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம்
உடுமலை, மார்ச் 12- உடுமலைபேட்டை நகராட்சியின் சிறப்புக் கூட்டத்தில், ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள சிஏஏ சட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். ஒன்றிய அரசு உடனடியாக இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு உறுப்பினர் கள் அனைவரும் ஒருமனதாக ஆதரவு கொடுத்து, தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. உடுமலை நகராட்சியின் சிறப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நகர் மன்றத் தலைவர் மத்தீன் தலைமையி லும், நகராட்சி ஆணையாளர் பாலமு ருகன் முன்னிலை நடைபெற்றது. இக் கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர் வேலுச்சாமி, ஒன்றிய அரசு அமல்ப டுத்தியுள்ள மக்கள் குடியுரிமைச் சட் டத்தை கண்டித்து தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார். இத்தீர்மா னத்திறக்கு உறுப்பினர்கள் அனைவ ரும் ஒருமனதாக ஆதரவு கொடுத்த னர். இதையடுத்து தீர்மானம் நிறை வேறியது. மேலும் நகராட்சியின் 2023 – 24 ஆம் நிதி ஆண்டிற்கான வருவாய் மற்றும் மூலதன நிதி, குடிநீர் வழங் கல், கழிவுநீர் நிதி மற்றும் ஆரம்பக் கல்வி நிதிக்கான திருத்திய வரவு செலவு திட்ட மதிப்பீடு, ஆரம்பக் கல்வி நிதிக்கான உத்தேச வரவு செலவு திட்டம் மதிப்பீடு செய்து மன் றத்தின் அனுமதிக்கு வைக்கப்பட் டது. நகராட்சி பட்ஜெட்டில் மொத்த வருவாய் ரூ. 7 கோடியே 73 லட்சத்து 24 ஆயிரத்து 300, மொத்த செலவுத் தொகையாக ரூ. 7 கோடியே 65 லட்சத்து 40 ஆயிரமாகவும் உள்ளது. உபரி நிதியாக ரூ.78 லட்சம் உள்ளதா கவும் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டது. நகர்மன்றத் தலைவர் மத்தீன் தாக்கல் செய்த நகராட்சி நிதி நிலை அறிக்கையில், நகர்மன்ற உறுப்பினர்களுக்கு தங்கள் வார்டுக ளில் நடைபெறும் பணிகளுக்கு பயன் படுத்திக் கொள்ளும் வகையில் தலா ரூ.12 லட்சம் என ரூ.3 கோடியே 96 லட்சம் நிதி ஒதுக்கீடு, பழைய நக ராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் தளி எத்தலப்ப நாயக்கர் திருவு ருவச்சிலை அருகே, மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான பழைய தேர் வைக்கப்படும், அந்த வளா கத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்க ரூ.15 லட்சம் நிதிஒதுக்கீடு, நகராட்சி அலுவலகம் மற்றும் நகரில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி களை பராமரிக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு, வணிக வளாகங்களை பரா மரிப்பு பணிகள் செய்து மேம்படுத் தும் பணிக்கு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு, அனைத்து வார்டு பகுதி களிலும் ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களுக்கு பராம ரிப்பு பணிகள் மேற்கொள்ள ரூ. 1 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு, பொள்ளாச்சி சாலை மின் மயானம் அருகே நகராட்சிக்கு சொந்தமான மயானபூமி, கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ளது. அந்த மயான வளாகத்தில் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.50 லட்சம் நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. இந்த சிறப்புக்கூட்டத் தில், நகராட்சி அதிகாரிகள், உறுப் பினர்கள் கலந்து கொண்டனர்.
411 பயனாளிகளுக்கு நலவாரிய அட்டை
திருப்பூர், மார்ச் 12- திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், திவ்யா மஹாலில் கலைஞர் மக் கள் சேவை முகாமில் தேர்வு செய்யப்பட்ட 411 யனாளிகளுக்கு நலவாரிய அட்டை மற்றும் மருத்துவ காப்பீடு அட்டைகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் செவ்வாயன்று வழங்கி னார். இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி, வீரணம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் உமாநாயகி, உள் ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
காட்டெருமைகளை வேட்டையாட கள்ள துப்பாக்கி – கும்பல் கைது
காட்டெருமைகளை வேட்டையாட கள்ள துப்பாக்கி – கும்பல் கைது உதகை, மார்ச் 12- காட்டெருமைகளை வேட்டையாடி பணம் சம்பா தித்து வந்த கும்பலுக்கு கள்ள துப்பாக்கி வாங்கி கொடுத்தவர்களை நீலகிரி வனத்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் 65 சதவீதம் வனப்பகுதி கொண்ட மாவட்டமாக நீலகிரி உள்ளது. இதனால் இங்கு சிறுத் தைகள், யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட பல் வேறு வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பகல் நேரங் களிலேயே தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதி கள், சாலை ஓரங்களில் காட்டெருமைகள் சர்வ சாதார ணமாக பார்க்க முடியும். இந்நிலையில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதியன்று குந்தா வனச்சரகம், குன்னூர் அருகே காட்டேரி அணை செல்லும் வழியில் காட்டெருமை ஒன்றை துப்பாக்கி யால் சுடப்பட்டு வேட்டையாடப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கவுதம் உத் தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசா ரணை நடத்தப்பட்டது. மேலும் கண்காணிப்பு கேமரா அடிப்படையில் ஆய்வு செய்து சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக சென்ற கார்களில் வந்தவர்கள் குறித்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் போலீசார் தங்களைத் தேடுவதை அறிந்த வேட்டை கும் பல் கேரளா, கர்நாடகா மற்றும் கூடலூர் பகுதியில் ஆங் காங்கே பதுங்கினர். தொடர்ந்து கண்காணித்த தனிப்ப டையினர் டிசம்பர் 6 ஆம் தேதியன்று கூடலூரை சேர்ந்த சிபு, சத்தீஷ், சுரேஷ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்திய தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதில், கூடலூரை சேர்ந்த மண்டபசாஜி(52) என்ப வர் வேட்டை கும்பலுக்கு கள்ள துப்பாக்கி வாங்கி கொடுத்ததும், காட்டெருமைகளை தொடர்ந்து வேட்டை யாடி அதன் கறியை விற்ற கும்பலில் மண்டபசாஜியின் சகோதரர் மண்டபத்தில் சைஜு(48), கேபி ஜூலெட்(35), குட்டன் என்கிற குட்டி கிருஷ்ணன்(44), ஜோஸ் குட்டி(39) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மண்டப சாஜி உள்ளிட்ட மற்ற 5 பேரையும் பிடிக்க வனத்துறையினர் சென்றபோது தலை மறைவாகினர். இதனையடுத்து, தனிப்படையினர் இவர்களை பிடிக்க கோவையில் 3 முறையும், கூடலூ ரில் 2 முறையும் முயன்ற போதும் பிடிக்க முடிய வில்லை. ஒரு கட்டத்தில் மண்டபசாஜியின் சகோதரர் மண்டபத்தில் சைஜு, கேபி ஜுலெட், குட்டி கிருஷ்ணன், ஜோஸ் குட்டி ஆகிய 4 பேரும் கடந்த 7 ஆம் தேதி யன்று உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சரண டைந்தனர். அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது செவ்வாயன்று மதியம் மண்டபசாஜி உதகைக்கு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து உதகை அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் வாகனத்தில் வந்த மண்டப சாஜியை தனிப்படையினர் மடக்கிப்பிடித்து கைது செய் தனர். இதன் பின்னர் அவரை நீலகிரி வன கோட்ட அலு வலகத்திற்கு அழைத்து வந்தனர். மண்டபசாஜி கைது குறித்து தகவல் அறிந்து அங்கு செய்து சேகரிக்க பத்திரி கையாளர்கள் சென்றனர். அப்போது மண்டப சாஜியை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அழைத்து வரப் பட்டார். அப்போது வனத்துறை அலுவலகத்திற்குள் நுழைந்த மண்டபசாஜியின் ஆதரவாளர்கள் பத்தி ரிகையாளர்களை ஒருமையில் பேசியதுடன் மிரட்டல் விடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவர்களை வனத்துறையினர் எச்சரித்து அலுவலகத்தில் இருந்து வெளியேற்றினர். இதனால் வனத்துறை அலுவல கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வெயிலில் இருந்து பறவைகளை காக்க முயற்சி
கோவை, மார்ச் 12- அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத் திலிருந்து பறவைகளை காக்கும் வண்ணம், கோவை வன உயிர் மற்றும் இயற்கை பாது காப்பு அமைப்பினர் சார்பில் மண் கிண்ணம் வழங்கப்பட்டு வருகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையில் உணவு, தண்ணீர் தேடி வன விலங்குகள் வனப் பகுதியை விட்டு வெளியேறி ஊருக் குள் புகுந்து விடுகின்றன. இந்நிலையில் வனத்துறை சார்பில் வனப்பகுதி ஒட்டி தொட் டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பி வருகின்ற னர். இதேபோன்று, வெயிலின் தாக்கத்திலி ருந்து பறவைகளை பாதுகாக்கும் வண்ணம், அவைகளுக்கு தண்ணீர் வைக்க வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்ட ளையினர் மண் கிண்ணங்களை இலவச மாக வழங்கி வருகின்றனர். பேரூர், வட வள்ளி, செல்வபுரம், தொண்டாமுத்தூர், மதுக்கரை, குனியமுத்தூர், சுந்தராபுரம், சர வணம்பட்டி, கணபதி போன்ற பகுதிக ளில் வழங்கி வருகின்றனர். இதனை, பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாங்கி வீட்டின் மொட்டை மாடி, மரத்தடி என பல் வேறு பகுதிகளில் பறவைகளுக்கான சிறு தானிய உணவுகள் மற்றும் தண்ணீர் வைத்து வருகின்றனர்.