ஈரோடு, ஜூன் 19- எழுமாத்தூர் அருகே சாலையோர மரங்களை அழிக்க முயற்சித்தவரைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நெடுஞ் சாலை துறையில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் புகார் அளித்தனர். ஈரோடு மாவட்டம், எழு மாத்தூர் கிராமம், எல்லக் கடையிலிருந்து வடுகபட்டி செல்லும் சாலை இருபுறங்களிலும் புளிய மரங்கள் நிறைந் துள்ளது. நிழல் தரும் மரங்களாகவும், சமைக்க பயன்படும் புளியும் கிடைக்கிறது. இவ்வாறு பல்வேறு வகையில் பயனுள்ள மரங்களை அழிக்கும் வகையில் விசமிகள் தீ வைத்துள்ளனர். 15க்கும் மேற்பட்ட அடி மரங்கள் பாதிக்கு மேல் எரிந்து சேதமடைந்துள்ளது. இதனால் மரங்கள் முழு மையாக காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை அழிவிலிருந்து பாதுகாக்கவும், தீ வைத்த அடையாளம் தெரி யாத நபர்களை கண்டறிந்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கத்தின் மொடக்குறிச்சி தாலுகா செயலாளர் டி.தங்க வேல் நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினர்.