districts

சென்னையில் புயல் வெள்ளம் வடியாததால் லாரிகள் நிறுத்தம்

சேலம், டிச.7- தலைநகர் சென்னையில் வெள் ளம் வடியாததால், நகருக்குள் செல் லாமல் லாரிகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. இதனால் அத்தியாவ சிய பொருட்கள் தேக்கமடைந்து, பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளன. தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங் களிலிருந்து இயக்கப்படும் லாரிகள், மிக்ஜம் புயல் வெள்ளத்தால் சென் னைக்குள் செல்ல முடியால் ஆங் காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள் ளன. குறிப்பாக, சேலம் மாவட்டத் தில் இருந்து சென்னைக்கு பால்,  ஜவ்வரிசி, இரும்பு தளவாடங்கள், வெல்லம், மஞ்சள், காய்கறி உள்பட  மக்களுக்கு தேவையான அத்தியாவ சிய பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. நாமக் கல்லில் இருந்து முட்டைகள், கறிக் கோழிகள், ஜவுளிகள் உள்ளிட்ட பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் பிற  மாவட்டங்களில் இருந்தும், வெளி  மாநிலங்களில் இருந்தும் சென் னைக்கு தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் பல்வேறு  சரக்குகள் அனுப்பி வைக்கப்படும். தற்போது சென்னையில் புயல் வெள் ளம் வடியாத நிலையில், 2 ஆயிரத் திற்கும் மேற்பட்ட லாரிகள் ஆங் காங்கே மேடான பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்  சரக்குடன் சென்ற லாரிகள் சென்னை புறநகர் பகுதிகளில் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளன. இதனால் சென்னை உள்பகுதிகளுக்குள் லாரிகள் செல்ல  முடியாத நிலையால் மக்களுக்கு அத் தியாவசிய உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், லாரி போக்குவரத்து முடங்கி உள்ளதால் லாரி உரிமையா ளர்களுக்கும் வருவாய் இழப்பு ஏற் பட்டுள்ளது. அதன்படி ஒரு லாரிக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 60 ஆயிரம் லாரி களுக்கும், ஒரு நாளைக்கு ரூ.18 கோடி வீதம் 4 நாட்களில் மட்டும் 72  கோடிக்கும் மேல் லாரி உரிமையா ளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட் டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதவிர நாமக் கல் மண்டலத்தில் இருந்து தினசரி 50 லட்சத்திற்கும் அதிகமாக முட்டை கள் லாரிகளில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னைக்குள் லாரிகள் செல்லாததால் இந்த முட் டைகள் கடந்த 4 நாட்களாக நாமக் கல்லில் தேக்கமடைந்துள்ளன. இதனால் முட்டை கோழிப்பண்ணை யாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.2.5 கோடி வீதம் கடந்த 4 நாட்களில் மட் டும் ரூ.10 கோடிக்கும் மேல் வருவாய்  இழப்பு ஏற்பட்டுள்ளதாக பண்ணை யாளர்கள் தெரிவித்துள்ளனர்.