நாமக்கல், ஜூலை 18- கடந்த காலத்தைபோலவே சிமெண்ட் லோடு வழங்க வேண்டும் என திருச்செங் கோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் லாரி உரிமை யாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். சேலம் மாவட்டம், சங்ககிரியில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த, நிறு வனத்தில், லாரிகள் சிமெண்ட் லோடு ஏற்ற பல சலுகைகள் வழங்கி வந்தது. அது நிறுத்தப்பட்ட நிலையில், ஏற்கனவே அளித்து வந்த சலுகைகளை வழங்க வேண்டும் உள் ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இதன்தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட் டம், திருச்செங்கோடு சரக துணை காவல் கண்காணிப்பாளர் (பொ) வின்சென்ட், கோட் டாட்சியர் (பொ) மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் ஆகியோரிடம் கடந்த 10 ஆம் தேதியன்று மனு அளித்தனர். அதன டிப்படையில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப் புக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், வருவாய் கோட்டாட் சியர் (பொ), மாவட்ட வழங்க அலுவலர் ரமேஷ் திருச்செங்கோடு காவல் துணை கண் காணிப்பாளர் இமயவரம்பன், லாரி உரிமை யாளர்கள் தரப்பில் படைவீடு முன்னாள் பேரூ ராட்சி தலைவர் பெருமாள் உள்ளிட்ட 7 லாரி உரிமையாளர்கள், இந்தியா சிமெண்ட்ஸ் நிறு வனத்தின் சார்பில் பாதுகாப்பு அதிகாரி முரளி தரன், விற்பனை அதிகாரி கபில்தேவ் ஆகி யோர் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையில், கடந்த 40 ஆண் டுகளாக, தமிழ்நாடு முழுவதும் சிமெண்ட் லோடு கொண்டு சேர்க்கும் பணியில் ஒப் பந்த லாரிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒப்பந்த லாரி களை புறம் தள்ளிவிட்டு அருகில் உள்ள மாநி லத்திலிருந்து வரும் லாரிகளுக்கு முன்னு ரிமை வழங்கப்படுகிறது. இதனை உடனடி யாக கைவிட வேண்டும். சிமெண்ட் மூட் டைக்கு ஆகும் பாதிப்புக்கு, லோடு ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளரை பொறுப்பாக் கக்கூடாது. மேட்டுப்பாளையம், திருப்பூர், கோபி, நாமக்கல், ஈரோடு, பொள்ளாச்சி, பல் லடம் போன்ற அனைத்து பகுதிகளுக்கு கடந்த காலங்களில் இயக்கப்பட்டு வந்த அனைத்து லாரிகளுக்கும் சிமெண்ட் லோடு வழங்க வேண்டும். கடந்த காலத்தைப் போலவே வண்டிகளுக்கு டர்ன் (வரிசையில்) போட்டு லாரி செட்டில் லோடு பிடித்து ஆர்டர் கொடுக்க வேண்டும். 30 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள லாரி பார்க்கிங்கை தொடர்ந்து பயன் படுத்த ஆவண செய்வதோடு, துண்டிக்கப் பட்ட மின்சாரம், தண்ணீர் வசதி ஆகியவற்றை மீண்டும் அளிக்க வேண்டும். பழையபடி கிலோமீட்டர் வாடகை கொடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்தியா சிமெண்ட்ஸ் தரப்பில், கோரிக் கைகள் குறித்து தங்களது நிர்வாகத்திடம் கேட்டு சொல்வதாக தெரிவித்தனர். மேலும், லோடிங் தொடர்பாக தங்களது சாரதா டிரான்ஸ்போர்ட் என்ற கிளை நிறு வனம் வசம் ஒப்படைத்து விட்டதாகவும், இது தொடர்பான அனைத்து விஷயங்களையும் அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என வும் தெரிவிக்கப்பட்டது. இதனால், அடுத்த கட் டமாக ஜூலை 20 ஆம் தேதிக்கு நடைபெற உள்ள பேச்சுவார்த்தையை ஒத்தி வைத்த வரு வாய் கோட்டாட்சியர் ரமேஷ், அன்றைய தினம் பேச்சுவார்த்தைக்கு சாரதா நிறுவனம் வர வேண்டும் என உத்தரவிட்டார்.