districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

காலாவதியான சுங்க சாவடிகளை அகற்றிடுக லாரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்

நாமக்கல், ஆக. 6- காலவாதியான சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் என  லாரி உரிமையாளர் சங்கத்தின் ஆண்டு விழா கூட்டத்தில் தீர் மானம் இயற்றப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் லாரி உரிமையாளர்  சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு  ஆண்டறிக்கை வரவு செலவு குறித்த விழா பரமத்தி வேலூர்  தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சிக்கு பரமத்தி வேலூர் தாலுக்கா லாரி உரிமை யாளர்கள் சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி னார். இதில் சிறப்பு விருந்தினராக பரமத்தி சட்டமன்ற உறுப் பினர் சேகர், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன  மாநில தலைவர் தன்ராஜ், செயலாளர் ராஜ் என்கிற ராமசாமி  ஆகியோர் பங்கேற்றனர்  முன்னதாக, லாரி உரிமையாளர் நலனை காக்க, ஜிஎஸ்டி  இருந்து விலக்கு அளிக்க வேண்டும், டீசல் விலையை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காலா வதியான சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சு போட்டி முடிவுகள்

ஈரோடு, ஆக. 6- ஈரோடு மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்  அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி வெள்ளியன்று  பள்ளி மாணவ, மாணவியர்களுக்கானப் பேச்சுப்போட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக 2-ஆம் தள கூட்ட அரங் கில் நடத்தப்பட்டது.  பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டியில் 44 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.  இதில் வலையபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி  ஜெ.தேசியவிழி முதல் பரிசு ரூ.5000 பெற்றார். வீரப்பன் சத்திரம், மா.ர.க.அ.ம.மே.நி.பள்ளி மாணவி வை.நந்தினி இரண்டாம் பரிசு ரூ.3000 பெற்றார். கலைமகள் மேல்நிலைப் பள்ளி மாணவி க.நித்யாஸ்ரீ மூன்றாம் பரிசு ரூ.2000 பெற் றார். மேலும், சிறப்புப் பரிசாக கொல்லம்பாளையம், நகரவை  மேல்நிலைப்பள்ளி மாணவன் ரா.சுஜானந்த்பரத் மற்றும்  ஓடத்துறை, சோமசுந்தரம் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ப.ச.அபிநயஸ்ரீ ஆகியோர் தலா ரூ.2000ம் பெற்றனர்.  நடுவர்களாக முதுகலைத் தமிழாசிரியர் நா.துரைராஜ், முது கலைத் தமிழாசிரியர் உ.கந்தசாமி, பட்டதாரி ஆசிரியர் வெ. நாகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

வீட்டின் கதவை உடைத்து கொள்ளை

கோவை, ஆக.6- தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து  காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின் றனர். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரை அடுத்த உவி யாம்பாளையம், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் பொன்னையா  என்கிற சிவா. இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஒரு  வயதில் மகன் உள்ளார். சுகன்யா அப்பகுதியிலுள்ள மாண வர்களுக்கு தனது வீட்டில் வைத்து டியூஷன் எடுத்து வரு கிறார். மேலும், ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், ஆராய்ச்சி படிப்புக்கான தேர்விற்கு சுகன்யா, தனது கணவருடன் திருப்பூர் சென்றுள்ளார். இந் நிலையில், பொன்னையாவின் தந்தை தனது பெயருடன்  வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப் பட்டிப்பதை கண்டித்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தனது மகன் மன்றும் தொண்டாமுத்தூர் காவல் துறை யினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தொண்டா முத்தூர் காவல் துறையினர் வீடு முழுவதும் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீ சார் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து

நாமக்கல், ஆக. 6- ராசிபுரம் அருகே டேங்கர் லாரியின் பின் னால் தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருபதுக்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர்.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த  சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், நாமக்கல் நோக்கி டேங்கர் லாரி சென்றது. அப்போது அத்தனூர் அம்மன் கோவில் அருகே நாய்குட்டி சாலையின் குறுக்கே சென்றுள்ளது. அப்போது டேங்கர் லாரி  ஓட்டுனர் பாபு என்பவர் உடனே வாகனத்தை  நிறுத்தியுள்ளார். அப்போது, லாரியின் பின் னால் வந்த தனியார் பேருந்து லாரியின் பின் பக்கத்தில் மோதியது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 20 க்கும் மேற்பட்டோருக்கு  காயம்  ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வெண்ணந்தூர் போலீசார் 108 ஆம்பு லன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவ மனைக்கு காயம்பட்டவர்களை அனுப்பி வைத்தனர்.படுகாயமடைந்த, மூன்று நபர் களுக்கு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பாச்சி அரிவாளுடன் இரவில் சுற்றி திரிந்த கும்பல் -  3 பேர் கைது

கோவை, ஆக. 6- சூலூரில் திருப்பாச்சி அரிவாளுடன் சுற்றி திரிந்து இரவில் தாக்கி இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையம் பகுதியில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை தடுத்து நிறுத்தி, அரிவாளை காட்டி வாகனத்தை பிடுங்கி செல்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.  கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதே பாணியில் மூன்று இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், நள்ளிரவில் சம்பவத்தை இவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவரை அரிவாளில் தாக்கி விட்டு அவரது வாகனத்தை திருடி சென்றதாக சூலூர் போலீசில் புகார் அளித்தார்.  இதனையடுத்து, கோவை எஸ்பி தலைமையில் 3  தனிப்படைகள் அமைக்கப்பட்டு, வழிப்பறியில் ஈடுபடும் நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  இந்நிலையில், சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில், இந்த கொள்ளையர்கள் குறித்து அடையாளம் தெரியவந்தது.  அரிவாளை காட்டி மிரட்டி வாகனத்தை பறித்து வந்தவர்கள், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் என்பதும்,  மூவரும் தென்னம்பாளையம்  பகுதியில் தங்கி பகலில் கட்டிட வேலை செய்து வருவதும், இரவில்  திருப்பாச்சி அரிவாளுடன் வாகன ஓட்டிகளை தாக்கி தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தென்னம்பாளையம் பகுதியில் தங்கியிருந்த இருந்த சாந்தப் பிரியன், ரித்திக் குமார், விஜய் ஆகிய 3 இளைஞர்களையும் கைது செய்த தனிப்படை போலீசார் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் அரிவாள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

காவலர்களின் குடும்பத்தினருக்கு  சிறு தொழில் பயிற்சி

கோவை, ஆக.6- கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றும் போலீ சார் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு கோவை மாவட்ட  தொழில் மையம் சார்பில் சிறு தொழில் பயிற்சி வழங்கப் பட்டது. கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மாநகர காவல் துறையில் பணியாற்றும்  காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்தினரை தொழில்  முனைவோராக்கும் முயற்சியாக, சுய தொழில் பயிற்சி முகாம்  கோவை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட தொழில் மையம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தொழிற்பயிற்சி வழங்கும் வல்லுநர் சரஸ்வதி ஈஸ்வரன், பேம் டிஎன் மாவட்ட அலுவலர் சாந்த  ஷீலா மற்றும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஸ்ரீனிவாசன் ஆகி யோர் கலந்து கொண்டு தொழில் பயிற்சிகளை வழங்கி னர்.  மேலும், தொழில் நடத்துவதற்கான கடன் பெறுவது எப்படி என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினர். இம்முகாமில் ஊறுகாய், ஜாம், ஐஸ்கிரீம், சாக்லேட், குழந்தை களுக்கு தேவையான உணவுகள், சூப் பவுடர் உற்பத்தி என  முழுமையாக சிறுதானியங்களை கொண்டு தயாரிப்பது, அதை சந்தைபடுத்துவது குறித்து பயிற்சிகள் வழங்கப் பட்டது. இந்த பயிற்சி முகாமில் போலீசார் மற்றும் போலீசாரின்  குடும்பத்தினர் என 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர்.

தொழிலாளிக்கு மிரட்டல்: வாலிபர் கைது

கோவை, ஆக.6- கொலை வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என தொழி லாளியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்த னர். கோவை பந்தையசாலை பகுதியில் கடந்த 2019 ஆம்  ஆண்டு ஒரு கொலை நடந்தது. இக்கொலை வழக்கில் பீள மேடு, பாரதி காலனி, 2 ஆவது தெருவைச் சேர்ந்த தொழிலாளி  சஞ்சீவ்குமார் (25) என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார்.  கொலை தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்து  வருகிறது. இதனிடையே, இந்த கொலையில் சாட்சி சொல்ல கூடாது என சஞ்சீவ்குமாருக்கு அடிக்கடி மிரட்டல் வந்துள் ளது. இந்நிலையில், சஞ்சீவ்குமார் தனலட்சுமி நகர் ரேசன் கடை அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர்  ஒருவர் சஞ்சீவ்குமாரிடம், “நீ இந்த வழக்கில் சாட்சி சொல்லக் கூடாது. அதனை மீறி செயல்பட்டால் கடுமையான விளைவு களை சந்திக்க நேரிடும்” என மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சஞ்சீவ்குமார் பந்தையசாலை காவல் நிலை யத்தில் புகாரளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சஞ்சீவ் குமாரை மிரட்டியது கணபதி, மூர் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த தீனா (எ) தீனதயாளன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

குறைகளை கூற வாட்ஸ் ஆப் எண்

கோவை, ஆக.6- குறைகளை கூறுவதற்கு வாட்ஸ்ஆப் எண்ணை மோப்ரிபாளையம் பேரூராட்சி நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது. கருமத்தம்பட்டி அடுத்த மோப்ரி பாளையம் பேரூராட்சியில் சசிகுமார் என் பவர் பேரூராட்சித் தலைவராக உள்ளார்.  இவர், பேரூராட்சி தலைவராக பொருப் பேற்ற பிறகு, பேரூராட்சி அலுவலக வளா கத்தில் கட்டணமில்லா இ-சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஆலோசனைகள் மற்றும் புகார் அளிக்கவும் வாட்ஸ்அப் எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து, மோப்ரிபாளையம் பேரூ ராட்சி தலைவர் சசிகுமார் கூறுகையில், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவை களை பொதுமக்களுக்கு எளிதில் கொண்டு சேர்க்கும் வகையில் கட்டணமில்லா இ-சேவை மையம் பேரூராட்சி சார்பில் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிறப்பு  மற்றும் இறப்பு சான்றிதழ், வருமானச் சான் றிதழ், இருப்பிட சான்று, பட்டா மாறுதல், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுக்கு விண் ணப்பித்தல் மற்றும் திருத்தம் செய்தல் என  பல்வேறு அரசுத் துறைகள் சார்ந்த சேவை களை கட்டணம் இல்லாமல் இங்கு மேற் கொள்ள முடியும். இதனால் அரசின் சேவை கள் மற்றும் நலத்திட்டங்களை எளிதில் பெற  முடியும்.  இதன் தொடர்ச்சியாக, தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து மோப்பிரி பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் 500 இலவச கழிப் பிடங்கள் கட்ட பணிகள் துவங்கப்பட் டுள்ளது. விரைவில் திறந்தவெளி கழிப்பிடம்  இல்லா பேரூராட்சியாக மோப்பிரி பாளையம் பேரூராட்சி உருவெடுக்கும் என  தெரிவித்தார்.