districts

img

ஒரே கூரையின் கீழ் மும்மத தெய்வங்கள்

திருப்பூர், மார்ச் 3- மதங்களைக் கடந்து நாங்கள் ஒன்றுபட்ட உழைப்பாளர் கள் என்பதை குறிக்கும் வகையில் ஒரே கூரையின் கீழ் மும் மத தெய்வங்களையும் வைத்து, புஷ்பா திரையரங்கம்  பேருந்து நிறுத்தம் அருகில் ஆட்டோ தொழிலாளர்களால் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. எம்மதமும் சம்மதம் எனக் குறிக்கும் வகையில் கடைகள்,  வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றில்  இந்து கடவுள், கிறிஸ்தவ கடவுள் மற்றும் முஸ்லிம்களுக்கான  மசூதியை ஒரே புகைப்படத்தில் உருவாக்கி மாட்டி வைத்தி ருப்பார்கள். அது தெய்வங்களுக்குள் மட்டுமல்லாது, மனி தர்களுக்குள்ளும் எவ்வித பாகுபாடும் பார்க்கப்படவில்லை என்பதற்கான அர்த்தம். இதுபோல் பல ஆண்டுகளுக்கு முன்பு  ஒரே கூரையின் கீழ் மும்மத தெய்வங்களின் கோவில் அமைக் கப்பட்டு இப்போதும் பலராலும் மகிழ்ச்சியாக வழிபட்டு செல் லும் இடம் திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ளது.  புஷ்பா பேருந்து நிறுத்ததில் ஆட்டோ ஸ்டாண்டு உள்ளது.  இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என மும்மதங்களை சேர்ந்தவர்களும் ஆட்டோ ஓட்டி வருகிறார்கள்.  புஷ்பா திரை யரங்கம் ஆட்டோ நண்பர்கள் குழு சார்பாக மதத்தால் வேறு பட்டாலும் அனைவரும் ஒன்றுபட்ட உழைப்பாளர்கள் என் பதை குறிக்கும் வகையில் 27 ஆண்டுகளுக்கு முன்பு 3 தெய் வங்கள் உருவப்படத்தையும் வைத்து கோவில் கட்டி வழிப் பட்டு வருகிறார்கள். இது குறித்து புஷ்பா திரையரங்கம் ஆட்டோ நண்பர்கள்  குழு தலைவர் முபாரக் அலி கூறியதாவது:-இந்தியா முழுவ தும் சமூக பதட்டத்தை உருவாக்கும் வகையில் குண்டு  வெடிப்பு சம்பவங்களும், அதை தொடர்ந்து பல  வன்முறைகள் நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது.  அப்போது திருப்பூரும் ஒன்றுபட்ட கோவை மாவட்டமாக  இருந்தது. எங்கள் ஸ்டாண்டில் எல்லா மதத்தையும் சேர்ந்த 30  ஆட்டோ ஓட்டுனர்கள் இருந்தோம். எந்த மதத்தைச் சேர்ந்தவ ராக இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்றுபட்ட உழைப்பாளர் கள் என்பதை குறிக்கும் வகையில் மதம், சாதி, கட்சி சாராமல் எங்கள் நண்பர்கள் குழு சார்பாக இந்த கோவிலை கட்டி னோம். இது வரை இரண்டு கும்பாபிசேகம் நடத்தியுள்ளோம்.  நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா, அவிநாசி கோவில்  ஆகிய இடங்களிலிருந்து தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டு  கோவிலில் வைத்து பூஜை செய்யப்படும். இந்த கோவில் கட்டி  27 ஆண்டுகள் முடிந்து 28 ஆம் ஆண்டு தொடங்க உள்ளது  என்று அவர் தெரிவித்தார்.