districts

img

முக்கூடல் தமிழ்ச்சங்க முப்பெரும் விழா

சேலம், ஜூன் 10- முக்கூடல் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா சேலத்தில் நடைபெற்றது.  சேலம் ராஜா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ் விற்கு கல்லை கோவிந்தன் தலைமை வகித்தார். முன்ன தாக மறைந்த தமுஎகச முன்னாள் சேலம் மாவட்ட தலை வர் மதுரபாரதி அவர்களின் படத்தை திறந்து வைத்து அஞ் சலி செலுத்தினர். இதில் மதுர பாரதியின் ஊர் பேசும் கதை கள் என்கிற சிறுகதை தொகுப்பை மருத்துவர் மகுடமுடி வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து ஆய்வரங்கம், கவிய ரங்கம், தமிழ் சான்றோர்கள் பதினாறு தமிழ் ஆளுமை களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கு நிகழ்வு என முப்பெரும்விழா நடைபெற்றது. நிறைவாக புதுவை சாகித் திய அகாதமி பொதுக்குழு உறுப்பினர் முனைவர் சுந்தர முருகன் நிறைவுரையாற்றினார்.