உடுமலை, டிச.22- உடுமலை காண்டூர் கால்வாய் கரை உடைப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான குளறுபடிகளைச் சரிசெய்ய வெள்ளியன்று கோட் டாட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. உடுமலை திருமூர்த்திமலை பகுதிகளில் பெய்யும் மழையால் வெள்ள நீர் காண்டூர் கால்வாயை கடந்து இயற்கையாக அமைந் துள்ள ஓடைகளில் வெளியேறும் வகையில் காண்டூர் கால்வாயின் மேல் பகுதியில் ‘சூப்பர் பாசேஜ்’ உயர் மட்ட பாலம் அமைக்கப்பட்டி ருந்தது. இது முறையாக பராமரிக் கப்படாததால், மலையிலிருந்து வரும் நீர் முழுவதும் காண்டூர் கால் வாயில் கலந்து வருகிறது. கன மழை பெய்யும் காலங்களில் காண்டூர் கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால், அவசரக் கால பயன் பாட்டிற்காக கோமாளியூத்து பள் ளம், வறப்பள்ளம், நல்லாறு உள் ளிட்ட 5 இடங்களில் ஷட்டர்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் ஓடை களில் வெளியேற்றப்பட்டு வந்தது. கால்வாய் மறு சீரமைப்பின் போது, ஷட்டர்கள் அனைத்தும், கான்கிரீட் கொண்டு அடைக்கப்பட்டது. கடந்த டிச.9 ஆம் தேதி திருமூர்த்தி மலைப் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காண் டூர் கால்வாயின் 37 ஆவது கி.மீ., பகுதியில் மூன்று இடங்களில் கால் வாய் கரை மண் அரிப்பு மற்றும் கரை உடைப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கால்வாய் உடைப்பு ஏற்பட்டிருந்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும். திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன்சோலை, வலை யபாளையம், ராவணாபுரம், எரிச னம்பட்டி, தேவனூர்புதூர் உள் ளிட்ட கிராமங்களில் உள்ள விவசா யிகள் பயன் பெறும் வகையில் இயற்கையாக மலையிலிருந்து ஓடைகளுக்கு வரும் இயற்கை நீர் வழித்தடத்தை மீட்டு ‘சூப்பர் பாசேஜ்’ பகுதிகளை முறையாக பராமரித்து, அவசரக்கால ஷட்டர் களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மலையடிவார பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்த னர். இந்நிலையில், விவசாயிகளின் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகை யில், வருவாய் கோட்டாட்சியர் ஜஸ் வந்த் கண்ணன் தலைமையில், வெள் ளியன்று நீர்வளத்துறை, வனத் துறை, பி.ஏ.பி திட்டக்குழு தலை வர், உறுப்பினர்கள், விவசாய பாது காப்பு சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் கோட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெற்றது. இதில், பங் கேற்ற விவசாயிகள் மலைப்பகுதி யிலிருந்து வரும் மழைநீர் ஓடை களில் செல்ல அமைக்கப்பட்டுள்ள சூப்பர் பாசேஜ் வழித்தடத்தை அக லப்படுத்தி முறையாக ஓடைகளில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண் டும், மேலும், வெள்ளப்பெருக்கு காலங்களில் காண்டூர் கால்வாயில் வரும் உபரிநீர் வெளியேற அமைக் கப்பட்ட ஷட்டர்கள் மறு சீரமைப் பின் போது கான்கிரீட் போட்டு அடைக்கப்பட்டதை அகற்றி அபாய காலங்களில் வெளியேற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும். நிரந்தர தீர்வாக மலையடிவார பகுதியில் உள்ள சுமார் 8 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களுக்கு புதிய பாசனத் திட்டத் தின் மூலம் பாசன வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர். விவசாயிகளின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு மாவட்ட ஆட் சியர் மூலம் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதி காரிகள் தெரிவித்தனர். இக்கூட்டத் தில், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப் பினர் மகேந்திரன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ் ணன், திட்டக்குழு தலைவர் மெடிக் கல் பரமசிவம், திட்டக்குழு உறுப்பி னர்கள், பொதுப்பணித்துறை அதி காரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.