நாமக்கல், ஜன.25- இந்தி திணிப்பை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறையின் குண்டுகளால் உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளின் 59 ஆண்டு நினைவு தினம் வியாழனன்று அனு சரிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்தி திணிப்பதை கண்டித்து, 1965 ஆம் ஆண்டு, மாணவர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது, போராட்டக் காரர்கள் மீது காவல் துறையை ஏவி துப்பாக்கி சூடு நடத் தப்பட்டது. இந்த போராட்டத்தின் போது நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது 15 வயது மாணவன் போலீசாரால் சுட் டுக்கொல்லப்பட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஜன.25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வரு கிறது. அதன்ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மொழிப்போர் தியாகிகள் நினைவுத்தூணுக்கு பல்வேறு அரசியல் கட்சி களைச் சேர்ந்தவர்கள், முற்போக்கு அமைப்பினர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.