districts

img

தோழர் என்.ராமகிருஷ்ணன் மறைவிற்கு அஞ்சலி

கோவை, டிச.13- மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், எழுத்தாளருமான தோழர் என்.ராமகிருஷ்ணன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இடதுசாரிகளின் வரலாற்று ஆசிரியரும், மூத்த எழுத்தாள ரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் என்.ராமகிருஷ்ணன் திங்களன்று காலமானார். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு கட்சியின் மூத்த தோழர் யு.கே.வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று தோழர் என்.ராமகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். ஈரோடு மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் தோழர் என்.ராமகிருஷ்ணன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.பரமசிவம், ப.மாரிமுத்து, ஆர்.கோமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர்தூவி செவ்வஞ்சலி செலுத்தினர்.