கோகுல்ராஜ் கொலை வழக்கில், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு மக்கள் உரிமை கூட்டணி அமைப்பு சார்பில் பாராட்டு விழா அவிநாசியில் நடைபெற்றது. இதில், அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் பாண்டிச்செல்வி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஈஸ்வரமூர்த்தி, பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.