ரஸ்ரா,ஜூன்.02- மண்டபத்தில் திருமணம் நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ரஸ்ராவில் கடந்த மே 30ஆம் தேதி ராகவேந்திர கவுதம் என்ற தலித் குடும்பத்தினர் மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடத்தியதற்காக 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து ராகவேந்திர கவுதம் அளித்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் அந்த கும்பல் சாதி ரீதியாக இழிவாகப் பேசி மேலும் தடி, இரும்பு கம்பிகளால் தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.