திருப்பூர், ஏப்.24- இடுவாய் ஊராட்சியில் சீரணம்பாளையம் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வேண் டும் என கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. பஞ்சாயத்து ராஜ் தினமான ஞாயிறன்று காலை 11 மணி அளவில் திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் உயர் நிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடை பெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.பரமசிவம், வார்டு உறுப் பினர்களான ஆர்.ஈஸ்வரி, ரமேஷ், பி.ஈஸ்வரி, மணி என்கிற சுப்பிரமணி, எம்.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் மற்றும் கால்நடை துறை, தோட்டக் கலை துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகளும், கிராம நிர் வாக அலுவலர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். இதில், இடுவாய், சீரணம்பாளையம் சாலையிலுள்ள தமிழக அரசுக்கு சொந்தமான மதுபானக்கடையை அகற் றக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுபானக் கடையை அகற்றக் கோரும் தீர்மானத்தை இதற்கு முந்தைய கிராமசபை கூட்டங்களி லும், ஊராட்சி மன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றியும், இந் தத் தீர்மானங்களை மாவட்ட ஆட்சியரிடமும் நேரிடையாக மனு மூலம் தரப்பட்டுள்ளது. இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் அதன்மேல் எடுக்கப்படவில்லை. இனி மேலாவது உடனடி கவனம் எடுத்து மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.