கேஎஸ்கே நினைவு தினத்தையொட்டி, திருமுருகன்பூண்டி அருகே அம்மாபாளையத்தில், சிபிஎம் அலுவலகம் முன்பு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், தமுஎகச நிர்வாகி காமராஜ், நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணியம், கிளைச் செயலாளர்கள் ராஜ், ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.