பசுவை வேட்டையாடிய புலி: மக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா, தேவர்சோலை அருகே 3 டிவிசன் பகுதி யைச் சேர்ந்தவர் சம்சு. இவர் தனது வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகிறார். மேய்ச்சலுக்காக கால்நடைகளை செவ் வாயன்று காலை வழக்கம்போல் அவிழ்த்து விட்டார். அதேபகுதியில் உள்ள தேயிலை தோட்டம் கரையோ ரம் பசு மாடு மேய்ந்து கொண்டிருந்தது. இதனிடையே நண்பகல் ஒரு மணியள வில் மாட்டின் அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து சுமார் 200 மீட்டர் தொலை வில் தேயிலை தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அங்கு ஓடோடி வந்து பார்த்தனர். அப்போது புலி ஒன்று பசு மாட்டை அடித்துக் கொன்று இழுத்து செல்வதை கண்டனர். இதனால் அச்சம் அடைந்த தோட்ட தொழிலாளர்கள் சத்தம் போட்டபடி ஓடி வந்தனர். இதைக் கண்ட புலி பசு மாட்டின் உடலை அங்கே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் நேரில் வந்து பார்வை யிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் கேமராக் களை பொருத்தி கண்காணிக்க முடிவு செய்தனர். மேலும், பொதுமக்கள் விழிப்பு டன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தி னர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இதுகுறித்து கூடலூர் உதவி வன பாதுகாவலர் கருப்பையா கூறு கையில், குறிப்பிட்ட இடத்தில் கேமராக் களை பொருத்தி கண்காணிக்கப்படும். அதன்பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஏற்க னவே பழங்குடியின பெண் ஒருவர் தெப் பக்காட்டில் புலி அடித்து கொன்று பலி யான நிலையில், பசுமாட்டை புலி அடித் துக் கொன்ற சம்பவம் பொதுமக்களி டையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதகை, பிப்.1- நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு பகுதி யில் புலி தாக்கி பெண் ஒருவர் பலியான சம் பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு பழங்குடி யின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர் மாரி(63). செவ்வா யன்று வெளியில் சென்ற அவர் நீண்ட நேர மாகியும் வீட்டிற்கு வரவில்லை. அவரது உற வினர்கள் அக்கம் பக்கத்தினர், வனப்பகுதி களில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந் நிலையில், புதனன்று அதிகாலை அந்த பகு தியை சேர்ந்த ஒருவர் வனத்திற்குள் சென் றார். அப்போது, அங்கு பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியான அவர் உடன டியாக ஊருக்குள் ஓடி வந்து தகவல் தெரி வித்தார். வனத்துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் வனத் துறையினரும், பொதுமக்களும் சம்பவ இடத் திற்கு சென்று இறந்து கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டனர். அப்போது அது இறந்து போனது மாரி என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து அறிய வனத்துறையினர் அவரது உடலை ஆய்வு செய்தனர். அப்போது அவரது உடலில் புலி தாக்கியதற்கான காயங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். வனத்திற்குள் சென்ற மாரியை புதர் மறை வில் மறைந்திருந்த புலி தாக்கி கொன்றுள் ளதும், பின்னர் அவரது உடலை இழுத்து சென்று, மாரியின் கால் பாகங்களை புலி யானது தின்று விட்டு உடலை அங்கேயே போட்டு விட்டு சென்றுள்ளது முதற்கட்ட விசா ரணையில் தெரியவந்துள்ளது. இதைய டுத்து, வனத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் பணியில் ஈடு பட்டுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதி முழுவ தும் புலியின் நடமாட்டம் இருக்கிறதா என் பதை கண்காணித்து வருகின்றனர். புலி தாக்கி பழங்குடியின பெண் பலியான சம்ப வம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, புலி தாக்கி மரணமடைந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நிவார ணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பழங்குடியின மக்கள் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வனத் துறை மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்தையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.