districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

இந்தியா கூட்டணிக்கு பழங்குடியினர் ஆதரவு

இந்தியா கூட்டணிக்கு பழங்குடியினர் ஆதரவு நாமக்கல், ஏப்.12- தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு, இந்தியா  கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, அந்தக் கூட்டமைப்பின் மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு துணைச்செயலாளர் தங்கராஜ் கூறுகையில், பழங்குடி யின மக்கள் மேம்பாட்டுக்கான திட்டங்களை வழங்கி வரும்  திமுகவுக்கு மக்களவை தேர்தலில் ஆதரவு அளிக்கும் முடிவை செயற்குழுக் கூட்டத்தில் எடுத்தோம். தமிழகத் தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளோம். ஒன்றிய பாஜக அரசை அகற்றும்  நோக்கில் எங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை மேற் கொள்ள இருக்கிறோம். ஏற்கெனவே, சென்னை திமுக தலைமை அலுவலகத்தில் கட்சிப் பொறுப்பாளர்களைச் சந் தித்து ஆதரவு கடிதத்தை வழங்கிவிட்டோம். தற்போது, கொல் லிமலையில் பிரச்சாரம் மேற்கொண்ட இந்தியா கூட்டணி யின் நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளர் மாதேஸ்வ ரன் மற்றும் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி., ஆகியோரிடம் ஆதரவு  கடிதத்தையும், பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை யும் மனுவாக வழங்கியுள்ளோம், என்றார்.

போலீசார் ஆலோசனைக் கூட்டம்

போலீசார் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல், ஏப்.12- ஏப்.19 ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடை பெற உள்ளதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம்  மேற்கொண்டு வருகின்றனர். வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பல கட்ட தேர்தல்  முன்னேற்பாடு பணிகள் செய்து வருகின்றனர். போலீ சார் சார்பில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று  வரும் நிலையில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தி லுள்ள பார் உரிமையாளர்கள், தாபா ஓட்டல் உரிமையா ளர்களுடன் போலீசார் ஆலோசனை மேற்கொண்டனர். குமா ரபாளையம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ராமகி ருஷ்ணன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில்  தாபா ஓட்டல்களில் மது விற்பனை செய்யவோ, மது குடிக்க  அனுமதிக்கவோ கூடாது. பார்களில் அரசு நிர்ணயம் செய்த  நேரம் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும். மற்ற நேரங் களில் மது விற்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

பாவம்! அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு போல

நாமக்கல், ஏப்.12- நாமக்கல் மக்களவை தொகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற அதிமுக பேச் சாளர் கௌதமி, ஈரோடு தொகுதி வேட் பாளருக்கு வாக்குசேகரித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு நகரப்பகுதியான வாளரை கேட்டில், நாமக்கல் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஹா தமிழ்மணிக்கு வாக்கு சேகரிப்பதற்காக அதிமுக நட்சத்திர பேச்சாளரும், நடி கையுமான கௌதமி வருகை தந்தார்.  அவரை அதிமுக மாவட்டச் செயலாள ரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப் பினருமான தங்கமணி வரவேற்றார். அப்போது பிரச்சார வாகனத்திலிருந்து பேசத் துவங்கிய கௌதமி, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரின் பெயருக்கு பதிலாக, ஈரோடு நாடாளு மன்ற தொகுதி வேட்பாளர் ஆற்றல்  அசோக்குமார் பெயரை உச்சரித்து,  வாக்குசேகரித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கட்சி தொண்டர் கள் கூச்சலிட, சுதாரித்துக்கொண்ட கௌதமி, “காலையிலிருந்து பல்வேறு  தொகுதிகள் மாறி பிரச்சாரம் செய்து  வருவதால் குழப்பம் அடைந்துவிட் டேன். இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்”, என்றார். இதைத்தொ டர்ந்து நாமக்கல் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் தமிழ்மணிக்கு வாக்களிக் குமாறு கேட்டுக்கொண்டார்.

நிதி நிறுவன தொல்லையால் இளம்பெண் தற்கொலை

நிதி நிறுவன தொல்லையால் இளம்பெண் தற்கொலை நாமக்கல், ஏப்.12- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள திரு வள்ளுவர் நகரைச் சேர்ந்த தம்பதியினர் கார்த்திகா (21) -  ராகுல் (27). இவர்களுக்க 3 வயதில் தர்ஷினி என்ற பெண் குழந்தை உள்ளது. கார்த்திகாவின் தந்தை இறந்துவிட்டதால்,  தாயார் ராணி என்பவர் தனது இளையமகள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கார்த்திகா – ராகுல் தம்பதியினர், ராணி இருந்த வீட்டிற்கு குழந்தையுடன் வந்து, நிதி நிறுவனங்க ளில் பெற்ற கடனை திரும்ப முடியாத நிலை உள்ளது. அத னால் அவர்கள் அடிக்கடி வந்து தொந்தரவு கொடுக்கிறார்கள் என்று கார்த்திகா கூறியுள்ளார். இதனால் மனவேதனை யடைந்த கார்த்திகா வீட்டின் பூஜை அறையில் தூக்கிட்டு  தற்கொலை செய்துகொண்டதாக ராணியிடம் ராகுல் கூறி யுள்ளார். இதையடுத்து ராணி மற்றும் அவரது உறவினர்கள் நேரில் சென்று, அவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்து வமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் கார்த்திகா ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர். இதுகுறித்து ராணி குமாரபாளையம் காவல் நிலையில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

விதிகளை மீறி கட்டப்பட்டிருந்த கொடிகள் அகற்றம் போலீசாருடன் அதிமுகவினர் வாக்குவாதம்

சேலம், ஏப்.12- சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆத ரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமி, வெள்ளியன்று இரவு சேலம் கோட்டை மைதானத்தில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதனிடையே, அதி முக நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை மற் றும் பெரியார் மேம்பாலம் முழுவதும் அதிமுக கொடிகளை  நட்டிருந்தனர். அனுமதிக்கப்பட்ட இடங்களை மீறி பல இடங்க ளில் கொடிகள் கட்டப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர்,  சேலம் மாநகர காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பே ரில் காவல் துறையினர் மற்றும் மத்திய துணை ராணுவத்தி னர் மாநகராட்சி பணியாளர்களைக் கொண்டு அதிமுக கொடியை அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவி னர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்திய நிலையிலும், எந்தவொரு அனுமதியும் கிடைக்காததால் அதிமுக கொடிகள் முழுமையாக பறி முதல் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம்  பரபரப்பு நிலவியது.

சாலை அமைக்கும் பணிக்கு இடையூறு  நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர், ஏப்.12- திருமூர்த்தி மலை முதல் குறுமலை  வரை சாலை அமைக்க அரசாணை  வெளியிடப்பட்டுள்ள நிலையில், வனச் சரகர் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக மலை வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். உடன டியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க  வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் மனு அளித்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர்  மாவட்டச் செயலாளர் செ.முத்துகண் ணன் வெள்ளியன்று மாவட்ட ஆட்சி யரிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது, திருமூர்த்தி மலை முதல் குறு மலை வரை சாலை அமைக்க அர சாணை வெளியிடப்பட்ட பின்னணி யில், அதனை நடைமுறைப்படுத்த தாங் களும் ஆனைமலை புலிகள் சரணா லய துணை இயக்குநரும், முழு ஒத்து ழைப்பு தந்து சாலை அமைக்க உரிய ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை மேற்கொண்டீர்கள்.  ஆனால், அதனை அமலாக்க வேண்டிய வனச்சரகர் (ரேஞ்சர்) அதற்கு இடையூறாக உள்ளார். சாலை  அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மக்களை தொடர்ச்சியாக மிரட்டுவதும்,  வழக்கு போடுவதுமாக உள்ளார்.  குறிப்பாக, வெள்ளியன்று அதி காலை சுமார் மூன்று மணி அளவில் வீடுகளுக்கு சென்று பெண்களிடம் ஆண்கள் எல்லாம் எங்கே என கேட்டு  மிரட்டியுள்ளனர். ஆண்கள் சாலை அமைக்கும் இடத்திலேயே தங்கி உடல் உழைப்பின் மூலம் சிறிது சிறிதாக பணிகளை செய்து வருகின்றனர். அவர்களை இணைத்துக் கொண்டு உரிய வழிகாட்டுதலை வழங்கி அரசின் உத்தரவை செயல்படுத்த வேண்டிய வனசாரகர் அதற்கு நேர் எதிராக செயல்படுகிறார்.  இதனால் மனம் வெறுத்துப் போன நிலையில் ஒரு பகுதி மலைவாழ் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு என்ற  நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களி டம் தொடர்ந்து பேசி புரிய வைத்து  தேர்தலில் வாக்களிக்க வேண்டிய  கடமை குறித்து உணர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வனச்சரகரின் இத்த கைய அத்துமீறிய நடவடிக்கை தேர்தல்  நேரத்தில் தேவையற்ற பதட்டத்தையும் சட்ட ஒழுங்கு பிரச்சனையும் உருவாக்க  கூடும். எனவே உரிய நடவடிக்கை எடுத்து சுமூகமாக அம்மக்களின் பங்க ளிப்போடு சாலை அமைக்க உரிய ஏற்பா டுகளை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தீப்பிடித்து எரிந்த வாகனம்

உதகை, ஏப்.12- விடுமுறையையொட்டி உதகைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ள நிலையில், கர்நாடக மாநிலம்  பெங்களூரை சேர்ந்த அஞ்சன் குமார் என்ற சுற்றுலாப் பயணி  தனது குடும்பத்துடன் உதகைக்கு வந்துவிட்டு மீண்டும் பெங்க ளூருக்கு திரும்பியுள்ளார். அப்போது, பட்பயர் பகுதியில் சென்று கொண்டிருந்த அவரது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக காரில் இருந்த அஞ்சன் குமார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கீழே இறங்கினர். தீ மள மளவென பரவிய நிலையில் கார் முழுவதும் எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  உதகை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை  அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதுமாக எரிந்து தீக்கி ரையானது.  எதனால் தீ பற்றி எரிந்தது என்பது குறித்து உதகை  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை யில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட் டது.

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகை, ஏப்.12- தொடர் விடுமுறையை முன்னிட்டு உதகையில் ஏராள மான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.  நீலகிரி மாவட்டம் உதகையில் இதமான காலநிலை நிலவும் கூடிய சுற்றுலா தளமாகும். இங்குள்ள சுற்றுலாத் தலங் களை காண ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்து அதிகளவு வருகை புரிகின்ற னர். நடப்பு ஆண்டு பள்ளிகளில் தேர்வுகள் ஏறக்குறைய முடி வடைந்த நிலையில், விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுதவிர  வழக்கத்தை விட இம்முறை கடுமையான வெயில் தாக்கம்  அதிகமாக காணப்படுகிறது. அதற்கேற்ப தற்போது கோடை  சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் வருகை  துவங்கி உள்ளது. ரம்ஜான் விடுமுறையான வியாழனன்று உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்ட பெட்டா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள்  கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மிதமான காலநிலை நிலவியதால் உதகை ஏரியில் படகு  சவாரி செய்ய ஆர்வம் காட்டினார்கள். இதேபோல், பைக் காரா படகு இல்லம், அவலாஞ்சி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பாஜக அராஜகம்: தேர்தல் ஆணையம்,  காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பூர், ஏப்.12 - திருப்பூரில் கேள்வி கேட்ட பெண்ணை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி அரா ஜகம் செய்த பாஜகவினர் மீது தேர்தல் ஆணையம், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. திருப்பூர், அனுப்பர்பாளையம் பகுதி யில் உள்ள, ஆத்துப்பாளையத்தில் பாஜக வினர் ஒரு பெண்ணை வீடு புகுந்து தாக்கி யுள்ளனர். பாஜக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தவர்களிடம், “நாப்கினுக்கு கூட  ஜிஎஸ்டி வரி போட்டு இருக்கீங்களே நியா யமா” என்று பல பெண்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். உடனே, அங்கு துணி கடை  வைத்திருந்த சங்கீதா என்ற பெண்ணின் கடை மற்றும் வீட்டுக்குள் நுழைந்து பாஜக வினர் தரக்குறைவான அசிங்கமான வார்த் தைகளில் அவரைத் திட்டி, தாக்கியுள்ள னர். இந்த நிகழ்வை வீடியோ எடுத்தவரை யும் தாக்கி அவரது செல்போனைப் பறித் துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை, சங் கீதா பெயர் சொல்லி அழைப்பது வீடியோ காட்சியில் தெளிவாக பதிவாகியுள்ளது.  இது குறித்து அவர் காவல்துறையில் புகார் செய்துள்ளார். காவல்துறை உடனடி யாக பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டு உள்ளது. தோல்வி பயத் துக்கு உள்ளான பாரதிய ஜனதா, தமிழ கத்தின் பல பகுதிகளில் கலவர, பதட்டச் சூழ் நிலையை ஏற்படுத்த முயற்சித்து வருகி றது. தமது வாக்குகளை பதிவு செய்ய வர  முடியாத அளவுக்கு பொதுமக்களை பாஜக அச்சுறுத்துகிறது. இந்த அராஜக முயற்சிக ளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவிக்கிறது. தேர்தல் ஆணை யம் இதில் உடனடியாகக் கவனம் செலுத்தி, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

தாவரவியல் பூங்காவில் விழிப்புணர்வு

தாவரவியல் பூங்காவில் விழிப்புணர்வு உதகை, ஏப்.12- 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி தோட்டக் கலைத்துறை சார்பில், உதகை தாவரவியல் பூங்காவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலி யுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தோட்டக் கலைத் துறை சார்பில் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் உதகை அரசினர் தாவர வியல் பூங்காவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 240 மலர்த்தொட்டிகளைக் கொண்டு வாக்குப்பதிவு நாளான ‘ஏப்ரல் 19’ வடிவம், தேர்தல் ஆணைய இலச்சினை, ‘கையில் மை உள்ளிட்ட வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலை யில், வியாழனன்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா தாவரவியல் பூங்காவை நேரில் பார்வையிட்டார். மேலும் தாவரவியல் பூங்காவுக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகளிடம் வாக்குப் பதிவு நாளன்று அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில், கூடுதல் ஆட்சியர் கௌசிக், தேர்தல் விழிப் புணர்வு பொறுப்பு அலுவலரும் ஆவின் பொது மேலாளரு மான ஜெயராமன், தோட்டக்கலைத் துறை இணை இயக்கு நர் ஷிபிலா மேரி, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

“ஆப்கி பார்.- சாக்கோ பார்”தான்

இன்று பேருந்தில் பயணம் செய்யும் போது பல இடங்களில் பிரதம மந்திரியின் விவசாயிகள் செழுமை மையம் (PM s kissan samrudhi kendra) என உரம் பூச்சிக்கொல்லி மருந்துகள் கடைகளுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். இது “one stop solution” போல.. நன்கு அறிந்த விவ சாயிகளுக்கு இது பயன் தரும் தான்.சிறு  குறு விவசாயிகள் நிலமை வேறு...விஷ யத்துக்கு வருகிறேன்... இந்த பிப்ரவரி  மாதத்தில் உணவு, உர மானியம் ரூ.31 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டுள் ளது ஏழைகள், விவசாயிகளை அதிர்ச்சி யடைய செய்துள்ளது.  ஒன்றிய இடைக்கால பட்ஜெட்டில், 2024-25 ஆம் நிதியாண்டில் உணவு மானி யத்துக்கு ரூ.2.05 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. இது நடப்பு நிதியாண்டில் வழங்கப் பட்ட மானிய தொகையான ரூ.2.12 லட்சம்  கோடியை விட குறைவு. அதாவது நடப்பு ஆண்டைவிட அடுத்த நிதியாண்டில் ரூ.7 ஆயிரம் கோடி உணவு மானியம் குறைக்கப் பட்டுள்ளது.இது ரேஷனில் வழங்கப்படும் உணவு தானியங்களை நம்பி உள்ள ஏழை, நடுத்தர குடும்பங்களை பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே போல், நடப்பு  நிதியாண்டில் 1.89 லட்சம் கோடி ரூபா யாக இருந்த உர மானியம் அடுத்த நிதி யாண்டில் 1.64 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று பட்ஜெட்டில் மதிப்பிடப் பட்டுள்ளது. உர மானியம் ரூ.25 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது விவசாயி களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இத னால், உரம் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், விவசாய விளை பொருட்க ளின் விலை உயரும் அபாயம் உள்ளது. (ஆதாரம் - தினகரன்) எப்போதும் போல ஏழை மேலும் ஏழை ஆக்கப்படுகிறான். பணக் காரன் மேலும் கொழுக்கப் போகிறான். மக்களே!!!  இந்த முறை எப்படிப்பட்டவர் பிரதமராக வர வேண்டும் என்பது நம் விரலில் தான் உள்ளது. இல்லையென்றால்  “ஆப்கி பார்.- சாக்கோ பார்”தான்

மாட்டுவண்டியில் சென்று ஆ.ராசா வாக்குசேகரிப்பு

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி யின் திமுக வேட்பாளர் ஆ.ராசா மாட்டு  வண்டியில் இருந்த படி வாக்காளர்களி டம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக் குகளை சேகரித்தார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதி யில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா, சத்திமங்கலம் தெற்கு ஒன்றியத்திற்குட் பட்ட அரசூர், உக்கரம், சென்பகப்புதூர், காந்திநகர், அரியப்பப் பாளையம் புளி யம்பட்டி பிரிவு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரச்சா ரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று  மேளம் தாளத்துடன் உற்சாக வரவேற் பளித்தனர். பின்பு செண்பகப்புதூர் என்ற இடத் தில் இரட்டை மாடுகள் பூட்டிய மாட்டு  வண்டியில், வேட்பாளர் ஆ.ராசா, மாவட் டச் செயலாளர் நல்லசிவம் ஆகியோர் பயணித்தப்படியே வாக்காளர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு களை சேகரித்தனர். அவருடன் தெற்கு  ஒன்றியச் செயலாளர் இளங்கோ, அரி யப்பம்பாளையம் பேரூர் கழக செயலா ளர் வக்கில் செந்தில்நாதன், முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.