districts

img

கோவை அரசு மருத்துவமனையில் ஹீமோபிலியா குழந்தைகளுக்கு சிகிச்சை

கோவை, ஏப்.19- ஹீமோபிலியா குழந்தைகளுக்கு நோய் தடுப்பு சிகிச்சை கோவை அரசு மருத்துவமனையில் துவங்கபட்டுள்ளது.  இதுகுறித்து, கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர் மலா கூறுகையில், ஹீமோபிலியா என்பது மரபணு வழியாக வரக்கூடிய ஒரு குறைபாடு. சாதாரணமாக உடலில் காயங்கள் ஏற்பட்டால் சில நிமிடங்களில் ரத்தக் கசிவு, தானாக நின்று விடும். பெரிய காயமாக இருந்தால் அதற்கான சிகிச்சை அளித் தால் ரத்தம் வெளியேறுவது நின்றுவிடும். ஆனால், ஹீமோபி லியா குறைபாடு உள்ளவர்களுக்கு, இரத்தம் உறையும் தன்மை இல்லாததால், இரத்தம் தொடர்ந்து வெளியேறும். உரிய சிகிச்சை இல்லாவிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படும். மரபு வழி குறைபாட்டான இது, ஆண்களை மட்டுமே பாதிக் கும். பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவது மிகவும் குறைவு. இரத்தத்தை உறைய வைக்க 13 காரணிகள் உள் ளன. அதில் ஏதேனும் ஒரு காரணி குறைபாடு இருந்தாலும் அவர்களுக்கு ரத்தம் உறைவதில் சிக்கல் ஏற்படும்.  பாதிப்பு உள்ள குழந்தைகள் நடக்க தொடங்கிய பின்பு,  கணுக்கால் மூட்டு மற்றும் முழங்கால் போன்ற உறுப்புகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, வீக்கம் மற்றும் வலி உண்டாகும். ரத்தப் பரி சோதனை மூலம் ரத்தம் உறையும் காரணி குறைவாக இருப் பதை உறுதி செய்யலாம்.

மற்றவர்களின் ரத்தத்திலிருந்து எடுக்கப்படும் ரத்தம் உறையும் காரணியை பாதிக்கப்பட்டவர் களுக்கு செலுத்துவதன் மூலம் ரத்தக்கசிவை குறைக்க லாம். நவீன மருத்துவத்தில் செயற்கை முறையில் உருவாக் கப்பட்ட உறையும் காரணிகளை உடலில் செலுத்துவதன் மூலம் ரத்தக்கசிவை கட்டுப்படுத்தி, பாதிப்பை குறைத்து ஊன மடைவதில் இருந்து தடுக்கலாம். ஹீமோபிலியா குறைபாடு உள்ளவர்களுக்கான இலவச சிகிச்சையை கோவை அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளது, என்றார். முன்னதாக, கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதி களில் ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்ட 350 பேர் உள்ள னர். உலக ஹீமாபிலியா தினத்தை முன்னிட்டு, நமது கோவை அரசு மருத்துவமனையில் 18 வயதுக்குட்பட்ட ஹீமோபிலியா வால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நோய் தடுப்பு சிகிச்சை முறையான PROPHYLAXIS என்னும் சிகிச்சை முறை 21  குழந்தைகளுக்கு புதனன்று கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா துவக்கி வைத்தார். பிரோபைலேக்சிஸ் சிகிச்சை முறையினால், இரத்தகசிவு  ஏற்படமால் இருக்க  முன்கூட்டியே தேவைப்படும் factors அளிப்பது ஆகும். இதன் மூலம் இரத்தக்கசிவின் மூலம் ஏற்படும் ஊனமடைதலை தவிர்த்து சாதாரணமான வாழ்வியல் சூழ்நிலையை ஏற்படுத்த இயலும்.  இந்நிகழ்வில், கோவை ஹீமோபிலியா சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.