சேலம், நவ.23- அரசு போக்குவரத்தில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை யும் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கோவை, சேலம் மண்டலங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடை பெற்றது. இதில், ஆயிரக்கணக் கானோர் பங்கேற்றனர். 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும். புதிய பென்சன் திட் டத்தை ரத்து செய்து பழைய பென் சன் திட்டத்தை அமல்படுத்த வேண் டும். ஓய்வுபெற்ற தொழிலாளர் களின் டிஏ உயர்வினை உடனடி யாக வழங்க வேண்டும். மின்வாரி யத்தைப் போல, போக்குவரத்து செலவினங்களுக்கு பட்ஜெட்டில் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. சேலத்தில், அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிற்சங்கங்கள் சார்பில் ராமகிருஷ்ணா சாலையில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற் றது. இதில் சிஐடியு போக்குவரத்து சங்க பொதுசெயலாளர் கிருஷ்ண மூர்த்தி, சாலை போக்குவரத்து மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் செயலாளர் அன்பழ கன் உள்ளிட்டு மத்திய தொழிற்சங் கத்தின் தலைவர்கள் உள்ளிட்ட ஏரா ளமானோர் பங்கேற்றனர். கோவை கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள போக்குவரத்து தலைமையகம் முன்பு நடைபெற்ற தொடர் முழக்க போராட்டத்திற்கு, சிஐடியு மாநில நிர்வாகி என்.முரு கையா தலைமை ஏற்றார். இதில் சிஐடியு, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ், ஐஎன்டியுசி, எம்எல்எப், ஏஏஎல்எப், டிடிஎஸ்எப் மற்றும் ஓய்வுபெற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் திர ளானோர் கலந்து கொண்டனர்.