சேலம், மார்ச் 25- அகில இந்திய பொது வேலை நிறுத்தம் தொடர்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து பணி மனைகள் முன்பு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத் தினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் விரோத சட்டங்களை இயற்றி வரும் ஒன் றிய பாஜக அரசை கண்டித்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து பணிமனைகள் முன்பு மத் திய தொழிற்சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதன்ஒருபகுதியாக சேலம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க கிளைச் செயலாளர் லியாகத் அலி தலைமையில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு சாலை போக்குவரத்து சங்கத் தின் மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், தமிழ் நாடு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் என்.முருகேசன், சிஐடியு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க மண்டல பொதுச்செய லாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்ட னர். இதேபோல் நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி, மேட் டூர், தாரமங்கலம், தம்மம்பட்டி, ஓமலூர், பள்ளப்பட்டி, மெய் யனூர் உள்ளிட்ட 18க்கும் மேற்பட்ட போக்குவரத்து பணி மனைகள் முன்பு போராட்ட விளக்க பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு போக்குவரத்து சங்க மண் டல தலைவர் செம்பொன், பொருளாளர் சேகர், துணை பொதுச்செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.