districts

img

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

திருப்பூர், ஜன.9 - அரசு போக்குவரத்து தொழி லாளர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள அக விலைப்படியை வழங்க வேண்டும் உட்பட 6 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போக்குவரத்து தொழிலாளர் கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர்.  அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு 2015 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள அகவிலைப்படி வழங்க வேண்டும். இதர அரசு ஊழியர்களுக்கு வழங்கு வது போல போக்குவரத்து ஊழியர்க ளுக்கு முறையான மருத்துவ காப்பீடு  வழங்க வேண்டும். பணியின் போது உயி ரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம்  வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுடன் திங்களன்று நடைபெற்ற பேச் சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து செவ்வாயன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த  போராட்டத்தில் சிஐடியு, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஈடுபட்டு வருகின் றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கேயம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து  தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி பணியில் உள்ள  தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வுபெற் றோர் சங்கக் கூட்டமைப்பு இணைந்து செவ்வாயன்று போக்குவரத்து காங்கே யம் கிளை முன்பு கண்டன ஆர்ப்பாட் டத்தை நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கேயம் கிளை சிஐடியு துணைச் செயலாளர் எஸ்.அசோக்குமார் தலைமை வகித்தார். ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ஈரோடு மண்டல பொரு ளாளர் ஆர்.நாச்சிமுத்து  விளக்க உரை  ஆற்றினார். சிஐடியு அரசுப் போக்குவ ரத்து ஊழியர் சங்க திருப்பூர்  மண்டல  துணைச் செயலாளர் நடராஜ், டிடி ஆர்எஸ்எப் சுப்பிரமணி, பெரியசாமி, துளசிமணி, எடிபி குமாரசாமி ஆகி யோர்  கோரிக்கைகளை விளக்கிப்  பேசி னார்கள். காங்கேயம் கிளை துணைத் தலைவர் காளிராஜ் நன்றி கூறினார். திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஏடிபி பொன்னுசாமி தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், சிஐ டியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மண்டலச் செயலாளர் பி.செல்ல துரை, ஓய்வுபெற்றோர் நலச் சங்க மாநில துணைப்பொதுச் செயலாளர் பி. செல்வராஜ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இதில் 200 க்கும் மேற் பட்ட அரசு போக்குவரத்து தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர். உடுமலை: உடுமலை போக்குவரத்து கிளையி லிருந்து தினமும் நகர்ப்புறங்கள் மற்றும்  கிராமங்களுக்கு மொத்தமாக 102 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் செவ்வாய்க்கிழமை முதல்  போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக உடு மலை பணிமனையில் மொத்தமாக இயக்க வேண்டிய 102 பேருந்துகளை இயக்க தொழிலாளர்கள் இல்லாத தால் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓட வில்லை.