கோவை, செப். 27- விலைவாசிக்கேற்ற பஞ்சப்படி வழங்குமாறு வலியுறுத்தி அரசு போக்கு வரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கோவை போக்கு வரத்து கழக தலைமையம் முன்பு செவ் வாயன்று 2ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியர் களுக்கு கிடைக்க வேண்டிய பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு அளித் துள்ளது. இதனை அமல்படுத்த வலியு றுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் ஐந்து மண்டலங்களில் கோவை போக்கு வரத்து கழக தலைமையம் முன்பு காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். கோவை மேட்டுபாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை பணிமனை முன்பு நடை பெற்று வரும், காத்திருப்பு போராட் டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். சேலம் இதேபோன்று அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலா ளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு மாவட்டத் தலைவர் டி.உதய குமார், மத்திய ஓய்வுபெற்ற ஊழியர் சங்க நிர்வாகி கே.ஆர்.கணேசன் ஆகி யோர் உரையாற்றினர். இதில், ஏராள மானோர் கலந்து கொண்டனர்.