கோவை, நவ.3- கோவை வஉசி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்கு கள் இடமாற்றம் செய்யப்பட்டன. கோவையில் செயல்பட்டு வரும் வஉசி உயிரியல் பூங்கா வில் போதிய இடவசதி இல்லாததால், பூங்காவின் உரிமத்தை கடந்த 2022ம் ஆண்டு ரத்து செய்து மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதனால் கடந்த ஒரு வரு டத்திற்கும் மேலாக உயிரியல் பூங்கா செயல்படாமல் இருந்து வந்த நிலையில், அங்குள்ள விலங்குகள், பறவைகள் ஆகி யவை அனைத்தும் வண்டலூர் பூங்கா, சத்தியமங்கலம் புலி கள் காப்பகம், வேலூர் உயிரியல் பூங்காவிற்கு இடமாற்றம் முடிவெடுக்கப்பட்டன. இதற்காக கோவை வந்த உயிரியல் பூங்கா ஆணைய நிர்வாகிகள் இங்குள்ள விலங்குகளை கணக்கிட்டு ஆய்வு செய்து அவற்றை இடமாற்றம் செய்வதற் கான பணிகளை மேற்கொண்டனர். முதற்கட்டமாக, பாம்பு கள் முதலைகள், குரங்குகள், ரோஸ் பெலிகன் பறவைகள் உள்ளிட்டவை இடமாற்றம் செய்யப்படுகிறது. அதனைத்தொ டர்ந்து இங்குள்ள அனைத்து விலங்குகளும் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.