districts

img

சமூக பாதுகாப்பு அளிக்க திருநங்கைகள் கோரிக்கை

சேலம், ஏப்.15- திருநங்கைகள் தினத் தில், சமூக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என திரு நங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் திங்களன்று திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டது. அதன்ஒருபகுதியாக சேலம் நாட்டாமை கழக கட்டிடம் முன்பு சேலம் திரு நங்கைகள் நலச்சங்கத்தின் சார்பில், கேக் வெட்டி திருநங்கைகள் தங்களின் தினத்தை சிறப்பாக கொண்டாடினர். அப்போது திரு நங்கைள் பேசுகையில், தங்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க ஒன்றிய, மாநில அரசுகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழ்வாதார  தேவைகளுக்கு சிறப்பு திட்டங்களை அமைத்து பணப் பலன்கள் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். வரும் நாடாளு மன்ற தேர்தலில் திருநங்கைகள் தற்போது கூடுதலாக வாக்களிக்க முன்வந்துள்ளது நல்ல விஷயம். மற்ற பாலினத்தவரை போல திருநங்கைகளுக்கும் முழுமையாக அரசு சலுகைகள் அளிக்க வேண்டும், என்ற னர்.