கோவை, மார்ச் 20- டாஸ்மாக் நிறுவனத்தின் லாபத்தை எப்எல்-2 மதுக்கடைகள் மூலம் தனியாருக்கு மடை மாற்றம் செய்வதை கண்டித்து கோவை யில் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங் கத்தின் சார்பல் மண்டல அளவி லான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பணிநிரந்தரம் தகுதி வழங்கல் சட்ட அமலாக்க அதிகாரியின் உத்த ரவின் அடிப்படையில் 480 நாள் பணி முடித்து 20 ஆண்டு காலமாக டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்து வரும் அனைத்து டாஸ்மாக் ஊழி யர்களையும் நிரந்தரப்படுத்தி, பணி தொடர்ச்சியுடன் அரியர்ஸ் வழங் கிட வேண்டும். துறை அமைச்சருடனான பேச்சு வார்த்தை முடிவுகளை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டும், அதிக விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, எப்.எல்.2 மனமகிழ் மன்றங்களை திறக்க அனுமதிக்க கூடாது, டாஸ்மாக் நிறு வனத்தின் மூலமாக வரும்லா பத்தை தனியாருக்கு மடைமாற்றம் செய்ய அனுமதிக்க கூடாது, கடை களில் ஊழியர் பற்றாக்குறை போக்க, விற்பனை அடிப்படையில் ஊழியர்கள் எண்ணிக்கை வரை யறை செய்து. பணிநிரவல் செய் திட வேண்டும். கடை ஆய்வுகளில் முறை கேட்டில் ஈடுபட்ட, கூடுதல் விலை விற்பனையை கண்காணிக்க, தடுக் கத் தவறிய மாவட்ட மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண் டும். உரிமம் பெறாமல் சட்டவி ரோதமாக செயல்படும் மதுக்கூ டங்களை அனுமதிக்கும் மாவட்ட மேலாளர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபு ரியும் மாவட்ட மேலாளர்கள், உதவி மேலாளர்கள், இளநிலை உதவியா ளர்கள் உள்ளிட்ட அலுவலர்களை பணியிடமாறுதல் செய்திட வேண் டும். ஓய்வு பெறும் வயதினை 58 லிருந்து 60 ஆக உயத்திட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோவை தெற்கு தாலுகா அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சிஐடியு கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் ஜான் அந்தோணி ராஜ் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினார். இதில். சிஐடியு கோவை மாவட் டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலு சாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மண்டல அளவிலான ஆர்ப்பாட் டத்தில் திருப்பூர் மாவட்டச் செய லாளர் அன்பு, ஈரோடு மாவட்டச் செயலாளர் பாண்டியன், கரூர் மாவட்டச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, நீலகிரி மாவட்டச் செயலா ளர் மகேஷ் மற்றும் கோவை மாவட்டப் பொருளாளர் ராமகிருஷ் ணன் உள்ளிட்டோர் உரையாற்றி னர். ஆர்ப்பாட்டத்தில் திரளான டாஸ்மாக் ஊழியர்கள் பங்கேற்ற னர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, கோரிக்கை மனுக் களை டாஸ்மாக் முதுநிலை மண் டல மேலாளரிடம் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க தலைவர்கள் அளித்தனர்.