districts

img

வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி

கோவை, பிப்.21- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி  செவ்வாயன்று (இன்று) நடைபெற உள்ள நிலையில், வாக்கு  எண்ணும் அலுவலர்களுக்கு கோவை ஆர்.எஸ்.புரம் மாநக ராட்சி கலையரங்கத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், செவ்வாயன்று வாக்கு எண்ணும் பணி கள் காலை 8 மணிக்கு துவங்க உள்ளது. கோவையை  பொறுத்தவரையில் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணும் பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன. இப்பணியில் 500க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். மொத்தம் 10 அறைகள் அமைக்கப்பட்டு, ஒரு அறைக்கு 14 இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ளது. அதன்படி, ஒரே நேரத்தில் 140 இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. மொத்தம் 9 சுற் றுக்கள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனிடையே வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலு வலர்களுக்கான பயிற்சி திங்களன்று கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில், 340 அலுவலர்களுக்கு மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டது. வாக்கு  எண்ணிக்கையின் போது, இயந்திரத்தின் சீல் அகற்றுதல், இயந்திரத்தின் செயல்பாடுகள், கடைபிடிக்க வேண்டிய முறைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.