districts

img

போக்குவரத்து ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன.10- 6 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி போக்குவரத்து ஊழியர்கள் திருப் பூரில் பல்வேறு பகுதிகளில் இரண்டாம்  நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில்  புதனன்று ஈடுபட்டனர்.

காங்கேயம்:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் காங்கேயம் பேருந்து  நிலையத்தில் இரண்டாம் நாள் வேலை  நிறுத்த மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர். சிஐடியு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மண்டல  துணைச் செயலாளர் நடராஜ் தலைமை யில் நடைபெற்ற மறியலில் போராட்டத் தில் ஈடுபட்ட  17  தொழிலாளர்கள் கைது  செய்யப்பட்டனர். இதில், சிஐடியு காங் கேயம் கிளை துணைச் செயலாளர் அசோக்குமார், ஓய்வுபெற்றோர் நல  அமைப்பு ஈரோடு மண்டலப் பொருளாளர்  ரமேஷ், பணியாளர்கள் சம்மேளனம் காங்கேயம் கிளைச் செயலாளர் பெரிய சாமி, பணியாளர்கள் சம்மேளனம் ஓய்வு  பெற்றோர் அமைப்பு சுப்பிரமணி ஆகி யோர் கலந்து கொண்டனர். இந்திய கம் யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் காங்கே யம் தாலுகா குழு செயலாளர் திரு வேங்கடம்சாமி வாழ்த்திப் பேசினார். சிஐடியு திருப்பூர் மண்டல துணைத் தலைவர் வின்சென்ட் நன்றி கூறினார். தாராபுரம்: தாராபுரம் பேருந்து நிலையத்தில் சிஐடியு ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட் டம் நடத்தப்பட்டது. ஏடிபி தொழிற்சங் கத்தின் தலைவர் சிவக்குமார் தலைமை  ஏற்றார். திருப்பூர் மண்டல நிர்வாகி டி.  ராமசாமி முன்னிலை வகித்தார். வேலை  நிறுத்தம்  குறித்து தாராபுரம் கிளை  சிஐ டியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க  கிளைச் செயலாளர் எஸ்.சதிஷ்வரன், ஓய்வுபெற்றோர் நல அமைப்பை சேர்ந்த  தாராபுரம் கிளைச் செயலாளர் வெள் ளைச்சாமி, டிடிஎஸ்எப் சங்கத்தின் முரு கானந்தம் விலக்கிப் பேசினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபு ரம் தாலுக்கா செயலாளர் எம்.கனகரா ஜன், பட்டு வளர்ச்சித் துறை அரசு ஊழி யர் சங்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் ஆகி யோர் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்திப் பேசி னர். முடிவில், நடராஜ் நன்றி கூறினார்.

உடுமலை:  

உடுமலை போக்குவரத்து பணி மனையின் முன்பாக புதன்கிழமை போராட்ட கூட்டுக்குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மண் டல துணை பொதுச் செயலாளர் விஸ்வ நாதன் தலைமை ஏற்றார். எடிபி சங்கத் தின் மண்டலத் தலைவர் ரவீந்திரன், கிளை  செயலாளர் சதீஸ்வரன்,  ரேவா அமைப் பின் நிர்வாகிகள் காளிமுத்து, நாச்சி முத்து, செல்வராஜ் பிஎம்எஸ் சங்கத் தின் நாகராஜ், ஓய்வு பெற்ற மேலா ளர் பாலதண்டபாணி, சிஐடியு சங்கத் தின் நிர்வாகிகள் பாபு, கார்த்திகேயன் உட்பட திரளானோர் கலந்து கொண்ட னர். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத் தின் மாவட்ட நிர்வாகிகள் பாலகிருஷ் ணன், ஆசிரியர் செல்லத்துரை மற்றும்  தாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.