நாமக்கல், ஏப்.21- குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் ஏற்பட்டுள்ள இடபற்றாக்குறையால், வழியில் நிற்கும் பேருந்துகளால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரு கிறது. கட்டிடங்கள் சேதமானதால் அவற்றை அகற்றி, புதிய கட்டிடங்களாக மாற்றியமைக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பேருந்துகள் உள்ளே நுழை யும் பகுதி அடைக்கப்பட்டு, பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் அனைத்தும் டெம்போ ஸ்டாண்ட் வழியாக திருப்பி அனுப்பப்பட்டது. பயணிகள் அந்த இடத்தில் இறங்கி யும், ஏறியும் வந்தனர். அங்கிருந்த கடையினருக்கு தற்கா லிக கடைகள் அமைக்கப்பட்டன. அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட டெம்போக்கள், டூரிஸ்ட் வேன்கள் மாற்று இடத்தில் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பேருந்து நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததால், நேர பிரச்சனை காரணமாக, போதிய அவகாசம் இருக்கும் பேருந்துக்ள் எடப்பாடி சாலை, மீன் மார்க்கெட் அருகே நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் தேவூர், இடைப்பாடி, பவானி, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் செல்ல, போதிய இட வசதி இல்லாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க, பழைய சார்பதிவாளர் அலுவலகம் இருக்கும் ஜே. கே.கே. வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டால், யாருக்கும் எவ்வித இடையூறும் இருக்காது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.