districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கடைவீதிகளில் அலைமோதும் கூட்டம்   போக்குவரத்து மாற்றம்

கோவை, அக். 22- தீபாவளி பண்டிகையையொட்டி சனிக் கிழமை முதல் 24-ந்தேதிவரை பொதுமக்கள்  செல்லும் முக்கிய சாலைகளில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகை யில், ஆத்துப்பாலத்தில் இருந்து ஒப்பணக் கார வீதி வழியாக அவிநாசி ரோடு செல்லும்  வாகனங்கள் ஒப்பணக்கார வீதியை பயன் படுத்தாமல் உக்கடத்தில் இருந்து வலதுபுறம்  திரும்பி வாலாங்குளம், சுங்கம் வழியாக செல்ல வேண்டும். உக்கடத்தில் இருந்து மேட்டுப்பாளை யம், மருதமலை, தடாகம் செல்லும் வாகன  ஓட்டிகள் பேரூர் பைபாஸ் செல்லும் ரவுண் டானா, செட்டி வீதி, சலீவன் வீதி காந்தி பார்க் வழியாக செல்ல வேண்டும். புட்டு விக்கிரோடு பாலக்காட்டில் இருந்து  கோவை வரும் வாகனங்கள் போத்தனூர், சுந்தராபுரம், பொள்ளாச்சி சாலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் தவிர  மற்ற வாகனங்கள் சுண்ணாம்பு காளவாயில் இடதுபுறம் திரும்பி புட்டுவிக்கி ரோடு உக்கடம் வழியாக செல்ல வேண்டும். உக்கடத்தில் இருந்து கோவைப்புதூர் மதுக்கரை மற்றும் பாலக்காடு செல்லும் வாகனங்கள் பேரூர் பைபாஸ் ரோடு, செல்வபுரம் ரவுண்டானா புட்டுவிக்கிரோடு வழியாக செல்லலாம். காந்திபுரம்  கிராஸ்கட்ரோட்டில் பொருட் கள் வாங்க வருபவர்கள் தவிர, ஆர்.எஸ். புரம், வடவள்ளி, மேட்டுப்பாளையம் செல்லும் வாகன ஓட்டிகள் 100 அடி சாலை,  சிவானந்தா காலனி சாலையை பயன்படுத்தி  செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல லாம். காந்திபுரம் கிராஸ்கட்ரோட்டில் பொருட் கள் வாங்க வருபவர்கள் மாநகராட்சி வாகன  நிறுத்த இடங்கள், கடைகளின் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். சனி,  ஞாயிறு விடுமுறை நாட்களில் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளி வளா கத்தை வாகனம் நிறுத்தும் இடங்களாக பயன் படுத்தலாம். கடைவீதி மற்றும் மக்கள் கூடும்  பொது இடங்களில், பொதுமக்கள் தங்களது வாகனங்களை மாநகராட்சி நிறுத்தும் இடம் அல்லது கடை உரிமையாளர்களின் இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். சாலைகளில் வாகனங்களை நிறுத்த கூடாது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு  அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

நகை திருடிய பெண் கைது

கோவை, அக்.22- கோவையில் வீட்டு வேலை பார்த்த இடத்தில் நகை, பணம் திருடிய பெண்ணை காவல் துறை யினர் கைது செய்தனர். கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் மனைவி ஸ்ரீதேவி (42). இவரது வீட்டில் இருகூரை சேர்ந்த சாந்தி (38) என் பவர் வீட்டு வேலைகள் செய்து வருகிறார். இவர்  வேலைக்கு வந்துவிட்டு, தனது வீட்டிற்கு சென்றுள் ளார். அப்போது வீட்டினுள்  பீரோ திறந்து கிடப்பதை  ஸ்ரீதேவி பார்த்துள்ளார். மேலும், பீரோவிலிருந்த 3  1/2 பவுன் தங்க வளையல்,  ரூ.25 ஆயிரம் திருடு போயி ருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். இதனால் சந்தே கத்தின் பேரில், சாந்தியிடம் விசாரித்தார். அப்போது அவர் முன் னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், இதுகுறித்து ஸ்ரீதேவி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார ளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டதில், நகை மற்றும் பணத்தை திருடியது சாந்தி என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறை யில் அடைத்தனர்.

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

கோவை, அக்.22- திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியை சேர்ந்தவர்  பிரிசன் (23). இவர் கோவை மலுமிச்சம்பட்டி பழனிசாமி நகர்  பகுதியில் தங்கி கொரியர் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல வேலைக்கு  சென்று  தனது மோட்டார் சைக்கிளில் இரவு வீடு திரும்பினார். பின்னர்  வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளே தூங்க  சென்றார். காலை எழுந்து வந்து வெளியே பார்த்தபோது தனது  மோட்டார் சைக்கிள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந் தார். இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தார். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பரமகுடியை சேர்ந்த சாம்பிரவின் (19) மற்றும் நிகில் (20) ஆகியோர் மோட்டார் சைக்கிளிலை திருடியது தெரியவந்தது. இதை யடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளிலை திருடிய நிகிலை  கைது செய்தனர். தப்பி ஓடிய சாம்பிரவினை தேடி வரு  கின்றனர்.

பழக்கடை  ஊழியர் கொலை: கைது

பொள்ளாச்சி, அக்.22- பொள்ளாச்சியில் பழக்  கடை ஊழியரை அடித்துக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனா். பொள்ளாச்சி, மார்க் கெட் சாலை பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (40).  பழக்கடை ஊழியர். இவர்,  தனது வீட்டின் முன்பு வியா ழக்கிழமை ரத்த வெள்ளத் தில் இறந்துகிடந்தார். இதனைப் பார்த்த அந்த வழி யாக சென்றவர்கள், பொள் ளாச்சி மேற்கு போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து, பொள் ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தினர்.விசா ரணையில், குப்புசாமியை அடித்துக் கொலை செய்தது பொள்ளாச்சி, குமரன் நகரைச் சேர்ந்த பிராய்லா் கடை உரிமையாளர் அருண்குமார் (28) என்பது தெரியவந்தது. இதை யடுத்து போலீசார், அவரைக்  கைது செய்தனர்.     

மியாவாக்கி முறையில் அடர் வனக்காடுகள் : ஆணையர் தகவல்

கோவை, அக்.22- வெள்ளளூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில்  தேங்கியுள்ள குப்பைகள் அழிக்கப்பட்டு வருகிறது. அங்கு 5  ஏக்கர் நிலத்தில் மியாவாக்கி முறையில் அடர் வனக்காடுகள்  உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ள தாக கோவை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் செய்தி யாளர்களிடம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநகராட்சி சார்பாக குப்பைகளை வீடு, வீடாக மக்களிடம்  இருந்து வாங்க 100 சிறிய ரக எலெக்டரிக் வாகனங்கள் வாங்க  ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.  இந்த வாகனத்தில் 650 கிலோ  வரை குப்பைகள் லோடு ஏற்று கொண்டு செல்லலாம். 100  வாகனத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை, இ வேஸ்ட்  போன்றவைகளை பெற தனி தனி அடுக்குகள் பிரித்து வைக் கப்பட்டிருக்கும். அதற்கு ஏற்றார் போல் வடிவமைப்பு செய் யப்பட உள்ளன. மேலும், குப்பைகளை இந்த வாக னங்கள் நுண் உயிர் உரக்கூடங்களுக்கு எடுத்து செல்லும்.  கோவை மாநகராட்சியில் ரூ.8 கோடி மதிப்பில் அண்மையில்  சாலை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. இதில்  80 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளன. மாநகராட்சிக் குட்பட்ட 100 வார்டுகளிலும் வார்டு சபை அமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளலூர் குப்பைகிடங்கில் பயோ மைனிங் மூலம்  20 ஏக்கர் வரை தேக்கி வைத்திருந்த குப்பைகள் அழிக்கப் பட்டுள்ளன. இதில், 5 ஏக்கர் நிலத்தில் மியாவாக்கி முறையில்  அடர் வனக்காடுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப் பட உள்ளன. மாநகராட்சி கட்டண கழிப்பிடத்தில் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் புகார்களின் அடிப்படையில் ஆய்வு  மேற்கொண்டு புகார் உறுதிப்படுத்தப்பட்டால் கழிப்பிட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும், என்றார். 

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: உடுமலை தம்பதி தலைமறைவு

திருப்பூர், அக். 22 - உடுமலைப்பேட்டையில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 9 லட்சத் துடன் தலைமறைவான தம்பதியை காவல்துறையினர் தேடி  வருகின்றனர். உடுமலை எம். பி. நகரை சேர்ந்த தம்பதியர் தீபாவளி  சீட்டு நடத்தி 400 க்கும் மேற்பட்ட நண்பர்கள், உறவினர்களி டம் மாதம் ரூ.200 என வசூலித்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக  வசூல் செய்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவு ஆகி  விட்டனர். இவர்கள் தீபாவளி சீட்டு நடத்தியதன் மூலம் ரூ. 9  லட்சம் வரை மோசடி செய்து உள்ளது தெரிய வந்துள் ளது.  இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் உடுமலை காவல் நிலை யத்தில் புகார் கொடுத்தனர். தலைமறைவான தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

உடுமலை அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:53.51/60அடி 
நீர்வரத்து:894கன அடி
வெளியேற்றம்:138கன அடி
மழையளவு:mm
அமராவதி அணை 
நீர்மட்டம்: 81.99/90அடி.
நீர்வரத்து:1134கனஅடி
வெளியேற்றம்:205கன அடி

சர்வர் பிரச்சனை: ரேசன் கடைகளில் மக்கள் அவதி

திருப்பூர், அக். 22 – திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் நியாயவிலைக் கடைகளில் வெள்ளி, சனி இரண்டு நாட்கள் சர்வர்  பிரச்சனை காரணமாக விற்பனையா ளர்கள் பில் போட முடியாமல், பொது மக்களுக்கு பொருள் விநியோகம் செய் வது பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் நியாயவிலைக் கடை களில் பயோமெட்ரிக் முறையில் பில் போட்டு மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யும் நடைமுறை உள்ளது. நவீன முறையாக  இருந்தாலும் இதில் வயதானவர்கள் பலருக்கு கை ரேகை பதிவாகாமல் சிர மப்படும் நிலையும் உள்ளது. தீபாவளி  பண்டிகைக்கு ஒரு சில நாட்களே உள்ள  நிலையில், வெள்ளிக்கிழமை காலை  திருப்பூரில் உள்ள பல நியாயவிலைக் கடைகளில் சர்வர் பிரச்சனை காரணமாக பயோமெட்ரிக் முறையில் பில் போட முடியவில்லை என விற்ப னையாளர்கள் தெரிவித்தனர். எனினும்  அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வந்தவர்கள் நெடுநேரம் காத்திருந்து பில் போட்டு பொருட்கள் வாங்கிச் செல்ல முயன்றனர். ஆனால் காத்தி ருந்தும் பில் போட முடியாத நிலையில்  எரிச்சல் அடைந்த சிலர், கடை விற்ப னையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் எங்களால் ஒன்றும்  செய்ய முடியாது என்று விற்பனையா ளர்கள் பதில் கூறியுள்ளனர். அதேபோல் சனிக்கிழமையும் பில்  போடுவதில் சர்வர் பிரச்சனை ஏற்பட் டது. காலை 9 மணி முதலே இந்த பிரச் சனை இருந்ததால் மக்கள் பெரும் அவ திக்கு உள்ளாகினர். அதுவும் திருப்பூ ரில் நியாயவிலைக் கடைகளில் பொருட் களை வாங்கிக் கொண்டு தீபாவளி பண் டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் இருந்த வர்கள் செய்வதறியாது திகைத்தனர்.  இன்றும் கடை விற்பனையாளர்களு டன் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தொடர்ந்து இரண்டு நாட்களாக நியா யவிலைக் கடைகளில் சர்வர் பிரச் சனை காரணமாக பில் போட முடியா மல், பொருட்கள் விநியோகம் பாதிக்கப் பட்டதால் பல்வேறு பகுதிகளிலும் மக் கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை  இருந்தது. இதையடுத்து கடை விற்ப னையாளர்கள் குடிமைப் பொருள்  துறை உயரதிகாரிகளின் கவனத்துக்கு இப்பிரச்சனையை கொண்டு சென்ற னர். அதற்கு, பயோமெட்ரிக் பில் போடும் மென்பொருளில் சில விபரங் களை மேம்படுத்தும் பணி நடைபெறு வதால், இது போன்ற பிரச்சனை ஏற்ப டுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித் ததாக விற்பனையாளர்கள் கூறினர். இதுபோன்ற பண்டிகை சமயத்தில் மென்பொருள் மேம்படுத்தும் பணியை  மேற்கொள்ள வேண்டுமா, மக்களை அவதிக்கு உள்ளாக்க வேண்டுமா, இத னால் நாங்கள்தான் மக்களிடம் சிக்கிக் கொண்டு சிரமப்பட வேண்டியுள்ளது என்று கடை விற்பனையாளர்கள் வேத னையுடன் கூறினர்.

தீபாவளி பண்டிகைக்கு திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய மக்கள்

திருப்பூர், அக். 22 - தீபாவளி பண்டிகை விடுமுறையை  முன்னிட்டு திருப்பூரில் இருந்து தொழி லாளர் குடும்பத்தினர் சொந்த ஊருக்கு  திரும்பிச் சென்றனர். பின்னலாடை நகரமான திருப்பூரில்  லட்சக்கணக்கான தொழிலாளர்கள்  வேலை செய்து வருகின்றனர். இங்கு  நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக பாடுபடக்கூடிய தொழிலாளர்கள், ஒவ் வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை சமயத்தில் சொந்த  ஊர்களுக்கு சென்று வருவது வழக் கம். இந்நிலையில், சனிக்கிழமை காலை  திருப்பூர் ரயில் நிலையம் மற்றும்  பேருந்து நிலையங்களில் வெளியூர்  செல்லும் பயணிகள் எண்ணிக்கை மிக  அதிக அளவில் காணப்பட்டது. சொந்த ஊருக்கு செல்ல திருப்பூர்  ரயில் நிலையத்தில் குவிந்த தொழிலா ளர்கள், நெருக்கடியில் ரயில் பயணம்  செய்தனர். திருப்பூர் ரயில் நிலையத்தில்  கோவையிலிருந்து - சென்னைவரை  செல்லக்கூடிய இன்டர்சிட்டி ரயிலில்  அதிகளவிலான கூட்டம் காணப்பட்டது. சொந்த ஊருக்கு செல்லும் ஆர்வத்தில்  ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ரயி லில் ஏறி கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த னர். மேலும் பலர் கூட்ட நெரிசலில்  உள்ளே செல்ல முடியாமல் நுழைவா யில் பகுதியில் நின்றபடியே பயணத்தை  மேற்கொண்டனர்  அதேபோன்று ரயில் முன்பதிவு  மையத்தில் தட்கல் டிக்கெட் புக்கிங்  செய்ய காலை முதலே வடமாநில  தொழிலாளர்கள் குவிந்தனர். திருப்பூர் ரயில் நிலையத்தில் தீபாவளி பண்டி கையை ஒட்டி 25 ரயில்வே காவலர்கள்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் வெளியூர் பேருந்து களிலும் பயணிகள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இத்துடன் இருசக் கர வாகனங்களிலும் குடும்பத்தினர், நண்பர்கள் பெருமளவுக்கு சொந்த  ஊருக்கு செல்லநெடுந்தூரம் பயணம்  மேற்கொண்டனர்.  புது மார்க்கெட் வீதியில் குவிந்த மக்கள் திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில்,  தீபாவளி பண்டிகைக்கு தேவையான  பொருட்கள் வாங்க பொதுமக்கள்  அதிகளவில் குவிந்ததால் கூட்ட நெரி சல் ஏற்பட்டது.  பின்னலாடை நகரமான திருப்பூர்  மாநகரில் அதிகளவிலான வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகை  நெருங்கிய நிலையில் பெரும்பான்மை யான பனியன் நிறுவனங்களிலும் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் பண்டிகைக்கு தேவை யான புத்தாடை, பட்டாசுகள், பர்னிச்சர்  மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள்  வாங்க திருப்பூர் புதுமார்கெட் வீதி, காம ராஜர் சாலை, குமரன் சாலை ஆகிய பகு திகளில் பொதுமக்கள் கூட்டம் அதிக ரித்து காணப்பட்டது. மேலும் குமரன்  சாலை, பல்லடம் சாலை உள்ளிட்ட பகு திகளில் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது. திருப்பூர் மாவட்ட, மாந கர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ரெயில் மோதி அடையாளம் தெரியாத முதியவர் பலி

கோவை, அக்.22- கோவை சிங்காநல்லூர் நீலிகோணம்பாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதி யவர் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் இளம் ஆய்வாளர் மங்கை யர்க்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது வலது  புறம் மார்பு மற்றம் வலது காலில் ஒரு மச்சம் இருந்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் முதியவரின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் மோதி இறந்து கிடந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து  தெரியவில்லை. அவர் ரெயில் தண்டவாளத்தை கடந்தபோது  ரெயில் மோதி அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து ெரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.

டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி படுகாயம்

கோவை, அக்.22- வால்பாறையில் 100 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதில் வடமாநிலத் தொழிலாளி பலத்த காய மடைந்தார். கோவை, வால்பாறையையடுத்த மாணிக்கா எஸ்டேட் செங்குத்துப்பாறை பகுதியில் தேயிலைத் தோட்டங்களில் மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. இதனை டிராக்டர் மூலம் வடமாநிலத் தொழிலாளியான சஞ்சய் (29) வெள்ளி யன்று மருந்து எடுத்து சென்றுள்ளனர். உடன் முருகன் (47) சென்றுள்ளார். டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது, திடீ ரென நிலைதடுமாறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சஞ்சய் மற்றும் டிராக்டரில் இருந்த முருகன் இருவரும் காய மடைந்தனர். இருவரும் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இதில் தலையில் பலத்த காய மடைந்த சஞ்சய் உயர்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து வால்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனா். 

மாசற்ற தீபாவளி கொண்டாடுக

ஈரோடு, அக். 22- விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவ ளியைக் கொண்டாடுமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தீபாவளித் திருநாளில் அனைவரும் பட் டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப் படுத்துவர். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர்,  காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசு படுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசி னால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர் கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர் கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படை யில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டு களைப் போலவே இந்த ஆண்டும் காலை 6  முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி  வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசு களை வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு ள்ளது. எனவே, குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்

உதகை, அக்.21- நீலகிரி மாவட்டத்தில் விதிகளை  பின்பற்றாத கடைகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குன்னூர், தொழிலாளர்‌ உதவி ஆணையர்‌ (அமலாக்கம்‌) கு.சதீஸ் குமார்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை தொழிலா ளர்‌ ஆணையாளரின் உத்தரவின்படி  நீலகிரி மாவட்டத்தில்‌ உள்ள பட்டாசுக்‌ கடைகள்‌ மற்றும்‌இனிப்பு தயாரிப்பு நிறுவ னங்களில்‌ சட்டமுறை எடையளவு சட்டம்‌ 2009 மற்றும்‌ பொட்டலப் பொருட்கள்‌ விதிகள்‌ 2011, குழந்தை தொழிலாளர்‌ முறைப்படுத்துதல்‌ தடுத்தல்‌ சட்டம்‌  1986-ன்‌ கீழ்‌ ஆய்வுகள்‌ மேற்கொள்ளப் பட்டது.  இந்த ஆய்வின்போது பட்டாசுக் ‌கடைகள்‌ மற்றும்‌இனிப்பு தயாரிப்பு நிறுவ னங்களில்‌ குழந்தை மற்றும்‌வளரி பருவத் ‌தொழிலாளர்கள்‌உள்ளனரா? என்பது குறித் தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாதது தொடர்பாக நிறுவனங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.  மேலும், 36 இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களில்‌ சட்டமுறை எடையளவு சட்டம்‌ 2009-ன்‌ கீழ்‌ முத்திரையிடாமல்‌ பயன் படுத்தப்பட்ட தராசுகள்‌ மற்றும்‌ பொட்டலப்‌ பொருட்கள்‌ விதிகள்‌ 2011-ன்‌கழ்‌உரிய அறி விப்புகள்‌ இல்லாத பொட்டலப்‌பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டதன்‌ மூலம்‌ ரூ.40  ஆயிரம் அபராதம்‌ வசூலிக்கப்பட்டு சட்ட  நீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டது. மேலும் நீலகிரி மாவட்டம் முழுவதும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.