திருப்பூர், டிச.9- திருப்பூரில் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டதால், அணைப்பாளையம் தரைப்பாலம் மூழ்கி போக்குவ ரத்து தடைபட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை, நீலகிரி மாவட்ட அணைகள் நிரம்பி தண்ணீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதைதொடர்ந்து, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்து பாய்ந்து வரும் நொய்யல் ஆறு திருப்பூர் மாநகரின் மையப்பகுதி வழியாக கடந்து செல்கிறது. சனியன்று காலை முதல் நொய்யல் ஆற் றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால், காலேஜ் சாலையும், மங்கலம் சாலையும் இணையும் அணைப்பாளையம் தரைப் பாலம் மூழ்கியது. அதிகளவு நீர் பாலத்தின் மேலே சென்ற தால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மத்திய போலீசார் அந்த பகுதியில் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரும்பு தடுப்புகள் அமைத்து இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தரைப்பாலத்தில் வெள்ளத்தை கடக்காத வகையில் எச்சரிக்கை விடுத்தனர்.