நாமக்கல், ஜூலை 11- திருச்செங்கோட்டில் போக்குவரத்து அதிகாரிகள் வியாழ னன்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில், வாகன ஆய்வாளர் பாமாபிரியா ஆகியோர் வியாழனன்று திடீர் வாக னத் தணிக்கை மேற்கொண்டனர். சுமார் 700 வாகனங்களை தணிக்கை செய்து 167 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்ப டும் வகையில் வரி செலுத்தாதது, மற்றும் இதர குற்றங்களுக் காக 52 வாகனங்களுக்கு தகுதிச்சான்று, அனுமதிச்சீட்டு, ஓட்டு நர் உரிமம் முதலியவை நடப்பில் இல்லாமலும் உரிய சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.