ஈரோடு, ஜூன் 19- ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதார பணியை தனியாருக்குக் கொடுக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டுமென சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பு வலியுறுத்தியுள்ளது. குடிநீர் வழங்கல் மற்றும் பொது சுகாதார பணி என்பது மக்கள் வாழி டங்களில், தெருக்களில், சாலை களில் தேங்கும் குப்பைகளை சேக ரித்து சுத்தம் செய்வதும், சேகரித்த குப்பைகளை குப்பை கிடங்கில் சேர்த்து, அங்கிருந்து அவற்றை அப் புறப்படுத்துவதும் நிரந்தர தன்மை கொண்டது. ஈரோடு மாநகராட்சி 60 வார்டு களைக் கொண்டது. இந்நகரத்தை சுத்தம் செய்வதற்கு தூய்மை பணியா ளர்கள் 1700 பேர் மாநகராட்சியில் இருக்க வேண்டும். ஆனால், தூய்மை பணியாளர்களாக பணியமர்த்தப் பட்டு அலுவலக பணியிலும், வரி வசூல், பொறியியல் பிரிவு, ஓட்டுநர் கள், மேற்பார்வையாளர்கள், டிபிசி பணியாளர்கள், கணிணி இயக்குநர், தரவு உள்ளீட்டாளர் ஆகிய பணி செய் பவர்களாக சுமார் 1300 பேர் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், நகராட்சி மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கை 2021ன் படி, இப்பணி களை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது என்று தெரிவிக்கப்பட் டது. கடுமையான ஆட்சேபணைக ளுக்கு மத்தியில் இவ்வறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டில் நகராட்சி நிர்வா கம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை யின் அரசாணைகள் மூலம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறான இணையவழி ஏல அறிவிப்பை ஆட் சேபித்தும், ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என சிஐடியு, எல்பிஎப் மற்றும் ஏஐடியுசி உள்ளிட்ட மாநகராட்சி தூய்மை பணியாளர் தொழிற்சங்க கூட்டமைப்பு வேலை நிறுத்தம் அறிவித்தது. இதனைத்தொ டர்ந்து மேயர், துணை மேயர் மற்றும் நகர காவல் துறை துணை கண்கா ணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஆகி யோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஜூன் 22 ஆம் தேதி (நாளை) வரை மாநகராட்சி ஏல நடவடிக்கை களில் ஈடுபட வேண்டாம் எனவும், தொழிற்சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக மாநகராட்சியின் நிலை குறித்து எழுத்துப்பூர்வமாகத் தெரி விக்க வேண்டும் என்றும், தொழிலா ளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், பொது சுகாதார பணியை தனியாரிடம் ஒப் பந்த முறையில் விடுவது என்ற தீர்க்க மான முடிவில் மாநகராட்சி இருப்பதா கத் தெரிகிறது. மாநகராட்சியின் இந்த முடிவிற்கு சிஐடியு உள்ளிட்ட தொழிற் சங்க கூட்டமைப்பு ஆட்சேபணை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணை யரிடம் எல்பிஎப் நிர்வாகி எஸ்.கிருஷ் ணன், சிஐடியு தலைவர் எஸ்.சுப்ர மணியன், பொதுச்செயலாளர் எஸ்.மாணிக்கம், எஸ்.ஜெகநாதன், ஆர்.மாரிமுத்து மற்றும் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் திங்களன்று மனு அளித்தனர். அதில், டெண்டர் ஆவணத்தில் துவக்கத்தில் குறைந்தபட்ச ஊதியத்தை ஒப்பந்த தாரர் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு தேவையான தொழி லாளர்கள் எண்ணிக்கை சுமார் 1700 ஆகும். ஆனால், டெண்டர் அறிவிப் பில் 1067 பேர் மட்டுமே சொல்லப்பட் டுள்ளது. இதனால் ஏற்கனவே பணி யாற்றி வரும் தொழிலாளர்கள் வேலை யிழக்கும் அபாயம் ஏற்படும். தொழி லாளர்களுக்கான சமூக பாதுகாப்பு கேள்விக்குறியாகும். எனவே, பொது சுகாதாரப் பணிகளை தனியாருக்கு விடுவதால் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கு ஏற் படும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆகவே ஒப்பந்த முறையை முற்றி லும் ரத்து செய்ய வேண்டும். ஏற்க னவே உள்ள முறையினை தொடர்ந்து கொண்டு செல்லவும், தொழிலாளர் களை பணி நிரந்தரம் செய்யவும் வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.