திருப்பூர், மார்ச் 3- பொது வேலை நிறுத்தத்தை வெற் றிகரமாக்குவது தொடர்பாக திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டுக் கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. 2022 மார்ச் 28, 29 - ல் நடைபெறவுள்ள அகில இந்திய பொது வேலைநிறுத் தம் குறித்த திருப்பூர் மாவட்ட அனைத்து தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டுக் கூட்டம் வியாழ னன்று பி.என்.ரோடு ஏஐடியூசி அலு வலகத்தில் நடைபெற்றது. ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் என். சேகர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.குமார், பனியன் சங்க பொதுச் செயலாளர் ஜி சம்பத், ஐஎன் டியூசி மாவட்ட செயலாளர் ஆ.சிவ சாமி, ஹெச்.எம்.எஸ்.மாவட்ட செய லாளர் ஆர்.முத்துசாமி, எல்.பி.எஃப் மாவட்ட செயலாளர் மூ,சம்பத், எல்.பி.எஃப் பனியன் சங்க செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் இக்கூட்டத் தில் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடி வுகள்: ஒன்றிய பாஜக மோடி அரசி டம் இருந்து நாட்டை காப்போம் மக் களை காப்போம் என்ற முழக்கத் தோடும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக் குவதற்காக துறைவாரியாக கூட்டங் கள் நடத்துவது,
பிரச்சாரங்களை மேற் கொள்வது, அனைத்து துறை சார்ந்த நிர்வாகிகளுக்கும் வேலை நிறுத்த துண்டுபிரசுரங்கள் கொடுப்பது உள் ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான் கையும் கைவிடு, மின்சார திருத்த சட் டத்தை திரும்பப் பெறு, விவசாயிக ளின் கோரிக்கைகளை நிறைவேற்று, பொதுத்துறை பங்குகளை தனியா ருக்கு விற்காதே, அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன்களை பாது காக்க சமூக பாதுகாப்பு திட்டத்தை உரு வாக்கு, திருப்பூரில் சீரழிந்து வருகிற பனியன் தொழிலை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், சிறு, குறு தொழில்களை பாதுகாக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை ஒன் றிய பாஜக அரசு போர்க்கால வேகத் தில் மேற்கொள்ள வேண்டுமென வலி யுறுத்தி பொது வேலை நிறுத்தம் நடை பெற உள்ளது.