districts

img

கவியருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

பொள்ளாச்சி, ஜூலை 28- ஆழியார் அருகே உள்ள  கவியருவியில் குளிக்க வனத்துறை அனுமதிய ளித்ததையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆழியார் அருகே அமைந்துள்ள கவியருவியில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக, அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கருதி கவியருவி மூடப்பட்டது. இந்நிலையில், மழை பொழிவு  குறைந்துள்ளதால் தற்போது கவியருவியில் சீரான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. கடந்த ஏழு மாதங்களாக மூடப்பட்டுள்ள கவியருவி புதனன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதித்துள்ளது. வனத்துறையின் இந்த அறிவிப்பையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.