உடுமலை, ஜன.30- உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில் ஞாயிறன்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத் திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரக பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவி லின் அடிவாரத்திலிருந்து 750 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.இங்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரம டைந்தது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீராதா ரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவி யில் ஒரு மாதத்திற்கும் மேலாக நிலையான நீர்வரத்து இருந்து வருகிறது. திருமூர்த்தி அணைக்கு சுற்றுலா வருகின்ற பயணிகள் அருவிக்கு சென்று குடும்பத்துடன் உற்சாகத்தோடு குளித்து வருகின்றனர். அந்த வகையில் ஞாயிறன்று விடுமுறையை யொட்டி வெளிமாவட்டம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பக்தர்கள் கார், வேன், பேருந்து களில் திருமூர்த்திமலைக்கு வருகை தந்தனர்.