districts

img

கோவை குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

கோவை, ஏப்.3- கோடை வெயில் வெளுத்து வாங்குவதையொட்டி, நீர்ப் பிடிப்பு உள்ள பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதி கரித்துள்ளது. இதன்ஒருபகுதியாக, கோவை குற்றால அருவி யில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர்.  தமிழகத்தில் கோடை காலம் இரு மாதங்களுக்கு முன்ன தாகவே துவங்கி விட்டது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கடும் கோடை வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில், கோடை வெயிலில் இருந்து தப்பித்து கொள்ளவும் குளு மையை அனுபவிக்கவும், சூழல் சுற்றுலா தளங்கள் மற்றும் நீர்ப்பிடிப்பு அதிகமுள்ள, அருவி, ஆறு, குளம் என மக்கள் படையெடுத்து செல்கின்றனர்.  இதன்ஒருபகுதியாக,  சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினத்தில், கோவையிலுள்ள சூழல் சுற்றுலா தளமான கோவை குற்றால அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். கோவை மட்டுமல்லாது வெளி மாவட்டங் களில் இருந்தும் பயணிகள் அதிகளவில் வந்தனர். கோடை  காலம் துவக்கம் மற்றும் மழையின்மை காரணமாக குற்றால  அருவியில் நீர் வரத்து குறைந்து உள்ள நிலையிலும், கோடை  வெப்பத்தை தனிக்க அதிக அளவிலான மக்கள் வந்து செல் கின்றனர்.