உதகை, டிச. 7- ஆயுட்கால வரி விதிப்பை ரத்து செய் யக்கோரி நீலகிரி மாவட்ட வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் 5 ஆயிரத்திற் கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயங்கி வருகின்றன. ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பய ணிகள் வந்தாலும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல் கின்றனர். இச்சமயங்களில் மட்டுமே இங்குள்ள சுற்றுலா வாகன ஓட்டுனர்க ளுக்கு சவாரி அதிகம் கிடைக்கும். மற்ற சமயங்களில் குறைந்த அளவே சவாரி கள் கிடைக்கும். இந்நிலையில், கடந்த மாதம் வரை மேக்சி கேப் வாகனங்களுக்கு அரசு காலாண்டு வரிவசூலித்து வந்தது. தற் போது ஆயுட் கால வரிசெலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள் ளது. இதனால் வரி செலுத்திவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மேக்சி கேப் வாகன ஓட்டுநர்கள் ஆங்காங்கே ஆர்ப் பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, உதகை ஏடிசி பகு தியில் நீலகிரி மாவட்ட வாகன உரிமை யாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, கோரிக்கை அடங்கிய மனுவை நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆர்டிஓ-விடம் வழங் கினர். அந்த மனுவில், எங்களது தொழில் மிகவும் நலிவடைந்து உள்ளது. எங்களது வாகனங்களை விற்க கூட முடியாத நிலை உள்ளது. மேலும் ஆயுட் கால வரி செலுத்தி ஓட்ட முடியாமல் தவித்து வருகிறோம். வரி செலுத்தும் சதவீதத்தை அனைத்து வாகனங்களுக் கும் ஒரே சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும். ஆயுட்கால வரியை ரத்து செய்ய வேண்டும் என அதில் தெரிவித் துள்ளனர்.