districts

img

ஆயுட்கால வரி: அவகாசம் கேட்டு சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் முற்றுகை

திருப்பூர், டிச.4- சுற்றுலா வாகனங்களுக்கான ஆயுட்கால  வரியைச் செலுத்த கால அவகாசம் வேண்டும்  என திங்களன்று சுற்றுலா வாகன ஓட்டுநர் கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் உள்ளன.  தற்போது வாகனத்திற்கு ஆயுட்கால வரியை  அரசு அதிகரித்து உத்தரவிட் டுள்ளது. இந்த தொகையை  உடனடியாக செலுத்த முடி யாது, வரி செலுத்தக் கால  அவகாசம்  வேண்டும்.மேலும், வட்டாரப் போக்குவ ரத்து அலுவலகத்தில் பதிவு  பத்திரம் எழுதி வாங்கு வதை நிறுத்திட வேண்டும்.  அனைத்து ஆவணங்களும்  சரியாக வைத்திருக்கும் வாக னங்களுக்குத் தகுதிச் சான்று வழங் கிட வேண்டும் என அளித்த மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனத் தெரி யவில்லை எனக் கோரி திருப்பூர் மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்.