districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சேலத்தில் மொத்தம் 29,28,122 வாக்காளர்கள்

சேலம், ஜன.23- சேலம் மாவட்டத்திலுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 29,28,122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024, இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான செ.கார்மேகம் திங்களன்று, அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட் டார். அதன்படி, சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி (தனி) சட்ட மன்ற தொகுதியில் மொத்தம் 2,25,312 பேரும், ஆத்தூர் (தனி)  சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,36,910 பேரும், ஏற்காடு  (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,79,664 பேரும், ஓம லூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,93,597 பேரும், மேட் டூர் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,69,907 பேரும், எடப்பாடி சட்டமன்ற மொத்தம் 2,82,892 பேரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும், சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,67,418 பேரும், சேலம் (மேற்கு) சட்ட மன்ற தொகுதியில் மொத்தம் 2,98,347 பேரும், சேலம் (வடக்கு) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,67,722 பேரும்,  சேலம் (தெற்கு) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,49,924 பேரும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,56,429 பேரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தற் போது சேலம் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள 11 தொகுதி களுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 14,56,299 பேர், பெண்கள் 14,71,524 பேர், மாற்றுப் பாலினத்தவர்கள் 299  பேர் என மொத்தம் 29,28,122 வாக்காளர்கள் உள்ளனர்.

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு

சேலம், ஜன.23- ஓமலூர் அருகே போலி ஆவணம் தயாரித்து 1.31 ஏக்கர்  நிலத்தை அபகரித்த அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவ சாயி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள மாரமங்கலம், ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி காளியப்பன் என்ப வர், தனது மகன்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில், மாரமங்கலம் ரெட்டிபட்டி பகுதியில் எங்களுக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் 25 சென்ட் நிலம் உள்ளது. இந்நிலை யில், அதேபகுதியில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களான ராஜமாணிக்கம், அவரது மனைவி ஜெயா ஆகியோர் போலி யாக ஆவணம் தயாரித்து, ஒரு ஏக்கர் 31 சென்ட் நிலத்தை அபக ரித்துக் கொண்டனர். இதுகுறித்து தொளசம்பட்டி காவல்  நிலையத்தில் புகாரளித்தபோது, காவல் துறையினர் புகாரை வாங்க மறுத்து தரக்குறைவாக பேசி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், விசாரணைக்கு தன்னை வரக்கூடாது எனக்கூறி ஆசிரியர்கள் ராஜமாணிக்கம், ஜெயா ஆகியோர் கொலை மிரட்டல் விடுகின்றனர். இதனால் எங்களால் அங்கு வாழ முடியாமலும், விவசா யம் செய்ய முடியாமலும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே,  மாவட்ட நிர்வாகம், நிலத்தை அபகரித்துக் கொண்டு கொலை  மிரட்டல் விடுக்கும் ஆசிரியர்கள் ராஜமாணிக்கம், ஜெயா ஆகி யோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்களது நிலத்தை மீட்டு தந்து, அருவருக்தக்க வகையில் பேசிய தொள சம்பட்டி காவல் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க  வேண்டும், என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறல்: கைது

நாமக்கல், ஜன.23- ஐஏஎஸ் பயிற்சி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய, பயிற்சி மைய உரிமை யாளரை காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே ஐஏஎஸ்  பயிற்சி வகுப்புகள் நடத்தி வருபவர், சீத்தா ராம்பாளையத்தைச் சேர்ந்த அஸ்வின் என்ற மெய்யழகன் (30). இவரது பயிற்சி மையத் தில் படித்து வரும் பெண்களிடம், சினிமாவில் நடிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி தவ றாக நடந்து கொண்டதோடு, அதனை புகைப் படம் எடுத்து வைத்து மிரட்டி வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவி, இவரது பயிற்சி  மையத்தில் சேர்ந்துள்ளார். அப்பெண் குறித்து, அவரது உறவுக்கார பெண்ணிடம், நடத்தை குறித்து அவதூறாக பேசியதோடு, இது போல் பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு அவர்களை மிரட்டி பாலியல் ரீதி யாக தொந்தரவு அளித்து வந்துள்ளார். இத னால், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மெய்யழகனை சந்தித்து கேட்டபோது, முன் னுக்கு பின் முரணாக பேசியதால், அப்பெண் ணின் தந்தை, அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன், மெய்யழகனை பிடித்து திருச் செங்கோடு நகர காவல் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். அங்கு அவரது செல்போனை பறி முதல் செய்து போலீசார் ஆய்வு செய்த போது, செல்போனில் ஆபாச புகைப்படங்க ளும், பெண்களிடம் பேசிய பதிவுகளும் இருந் ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீ சார், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, திருச் செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத் தில் நேர்நிறுத்தினர். அங்கு அஸ்வினை 15  நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப் பட்டு, திருச்செங்கோடு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

குரூப் 4 இலவச பயிற்சி பிப்.1 முதல் துவக்கம்

தருமபுரி, ஜன.23- தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் பிப்.1 ஆம் தேதி முதல் துவங்கவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது, தருமபுரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தருமபுரி நகராட்சி இணைந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள கிராம நிர்வாக அலுவலர், இள நிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளுக் கான ஒருங்கிணைந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள், சந்தைப்பேட்டையில் (தருமபுரி நகராட்சி நகர்புற வீடற்ற ஏழைகள் தங்கும் இல்ல  வளாகத்தில்) பிப்.1 ஆம் தேதி முதல் துவங்க வுள்ளது. இப்பயிற்சி வகுப்பானது வார இறுதி நாட்களில் மட்டும் நடைபெற உள்ளது. இப் பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் https://t.ly/6rMNv இணைப்பின் மூலம் தங் களை பதிவு செய்துக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்: 04342–296188யை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு: தண்ணீர் வீண்!

சேலம், ஜன.23- மேட்டூர் அருகே கூட்டுக்குடிநீர் திட்ட ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப் பால், பல லட்சம் லிட்டர் குடிநீர் வெளி யேறி, வீணானது. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள தொட்டில்பட்டி காவிரி ஆற்றில்  நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத் திற்கு நாளொன்றுக்கு 28 மில்லியன் லிட் டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் மேச்சேரி, தொப்பூர், காடையாம் பட்டி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரி யம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில், அனல் மின்நிலைய சாலையில்  உள்ள காடையாம்பட்டி செல்லும் கூட் டுக்குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், சுத்திகரிக்கப் பட்ட தண்ணீர் வீணாக வெளியேறியது. ஒரு மணி நேரத்திற்கு தண்ணீர் வெளி யேறியதால் பல லட்சம் லிட்டர் சுத்திக ரிக்கப்பட்ட குடிநீர் வீணானது. இதனால்  காடையாம்பட்டி பகுதிக்கு குடிநீர் விநி யோகம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து  தகவலறிந்த குடிநீர் வடிகால் வாரிய  அதிகாரிகள் மின்மோட்டாரை ஆப் செய்து தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தினர். குடிநீர் குழாய் சேதமடைந்து காணப் படுவதால், இதேபகுதியில் பலமுறை தொடர்ந்து குழாயில் உடைப்பு ஏற் பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருகிறது. பழுதான ராட்சத குழாயை நீக்கி புதிய குழாய் அமைத்தால் உடைப்பு ஏற்படாது என அப்பகுதி மக் கள் தெரிவித்துள்ளனர்.

சட்ட விழிப்புணர்வு முகாம்

தருமபுரி, ஜன.23- பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டியில் நடை பெற்ற சட்ட விழிப்புணர்வு ஆலோசனை முகாமில் பலர் கலந்து கொண்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப் பட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி கிராமத்தில், பென்னாகரம் வட்டச் சட்டப்பணிகள் குழு மற்றும் ஏரியூர் வைகை தொண்டு நிறுவனம் சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பென்னாகரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடு வர் நீதிபதி நாகலட்சுமி தலைமை ஏற்று முகாமினை தொடங்கி வைத்தார். வழக்கறிஞர் தேவேந்திரன், தற்போது உள்ள சட் டங்கள், முன்பு இருந்த சட்ட திட்டங்களையும் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பென்னாகரம் சட்ட தன்னார்வலர் சிவக்குமார், ஏரியூர் வைகை தொண்டு நிறு வன இயக்குனர் குமரேசன் ஒருங்கிணைப்பாளர் சஞ்சய்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அணை நிலவரம்

சேலம், ஜன.23- சேலம் மாவட்டம், மேட் டூர் அணையில், செவ்வா யன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 70.77 அடியிலிருந்து 70.79 அடி யாக சற்று அதிகரித்துள்ளது.  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1250  கன அடியிலிருந்து விநா டிக்கு 961 கன அடியாக சரிந் துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநா டிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வரு கிறது. அணையின் நீர் இருப்பு 33.38 டிஎம்சியாக உள்ளது. 

ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள்

திருப்பூர், ஜன.23- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2023-24 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி பிற்ப டுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு சிறப்பு பழுதுபார்ப்பு மற்றும்  பராமரிப்பு பணிகள் பொதுப்பணித்துறையின் மூலம் மேற் கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட் டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப் பட்ட திருப்பூர் பிற்படுத்தப்பட்டோர் நல அரசு கல்லூரி மாண வர் விடுதிக் கட்டிடத்தில் முதல் தளத்தின் 6 அறைகளுக்கு மறு கூரை அமைத்தல், சமையலறை மற்றும் ஸ்டோர் அறைக்கு  மறுகூரை அமைத்தல், நீர் வழங்கல் மற்றும் சுகாதார ஏற்பாடு கள் உள் மற்றும் வெளிப்புற வர்ணம் பூசுதல் மற்றும் வடி கால் ஏற்பாடுகள் ஆகிய பணிகள் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டத்தில் 153 தீர்மானங்கள் நிறைவேற்றம்

திருப்பூர், ஜன.23- திருப்பூர் மாவட்ட  ஆட்சியர் அலுவ லகக் கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் செவ்வாயன்று மாவட்ட சுகாதா ரப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.  இதில், 153 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு மாநில சுகாதாரப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், தெரிவித்தார்.  திருப்பூர் மாவட்டத்தில் பொது சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் சுகாதாரப் பேரவை இரண்டாம் கட்டக் கூட்டம் நடைபெற் றது. மாவட்டத்தில் சுகாதாரப் பேரவை முதல் கூட்டம் கடந்த 2022 ஆம்  ஆண்டு டிச.22 ஆம் தேதி நடைபெற்றது.  மாவட்ட சுகாதாரப் பேரவைக்  கூட்டம்  நடைபெறுவதற்கு முன் வட்டார அள வில் சுகாதார பேரவை நடத்தப்பெற்று, வட்டார அளவிலான தேவைகள், மக் கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள்  ஆலோசனைக்கேற்ப தொகுத்து மாவட்ட சுகாதார பேரவையில் விவா திக்கப்பட்டு மாநில அளவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல்  சுகா தாரப் பேரவைக் கூட்டத்தில் 122 கோரிக் கைகள் மாவட்ட மற்றும் வட்ட அளவில் தீர்க்கப்பட வேண்டியவையாகும். இதில் பெரும்பாலும் கட்டமைப்பு தொடர்பான கோரிக்கைகள். இதில் சில  மருத்துவமனைகளுக்கு மருத்துவ உப கரணங்கள் கோரப்பட்டுள்ளன. 224 கோரிக்கைகள் மாநில அளவில் பரிசீல னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. 224 கோரிக்கைகளில் அதிகப்படியாக கட்டு மானங்கள் தொடர்பானவை. இவற்றின்  மதிப்பு சுமார் ரூ.5 கோடி. இதில் 75 சத வீதப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மாவட்ட சுகாதாரப் பேர வையின் இரண்டாம் கூட்டத்தில் ஒருங் கிணைப்புக்குழு பரிசீலித்து எடுக்கப் பட்ட 153 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு  மாநில சுகாதாரப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், தெரிவித்தார்.  இக்கூட்டத்தில், மேயர் ந.தினேஷ்கு மார், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி.கிரியப்பனவர், துணை மேயர்  ரா.பாலசுப்பிரமணியம், உதவி ஆட்சி யர் (பயிற்சி) கிருத்திகா எஸ்.விஜயன்,  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை முதல்வர் முருகேசன், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) கனக ராணி, துணை இயக்குநர் (சுகாதாரப்ப ணிகள்) ஜெகதீஸ்குமார். மாநகர நல  அலுவலர் கௌரி சரவணன், உள்ளாட்சி  அமைப்புகளின் பிரதிநிதிகள், மருத்து வர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

காலமானார்

 கோவை, ஜன.23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை தெற்கு நகரக் குழு முன்னாள் உறுப்பினரும், பிஎஸ்என்எல்  ஓய்வுபெற்றோர்  சங்கத்தின் குறிச்சி கிளைத் தலைவரும்,  தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோவனின் சம்மந்தியுமான எம். மதனகோபாலன் (67) உடல்நலக்குறை வால் இயற்கை எய்தினார். இந்நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் புதனன்று (இன்று) க.எண்45, அண்ணமநாயக் கர் வீதி,குனியமுத்தூர், கோவை - 641008 என்ற முகவ ரியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆடவர் கூடைப்பந்தாட்ட அணி வெற்றி

கோவை, ஜன.23- கோவையில் நடைபெற்ற ஆடவர் கூடைப்பந்தாட்ட போட் டியில் தமிழக அணி , சண்டிகர் மாநில அணியை வென்றது.      கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள  கூடைப்பந்து உள் விளையாட்டு அரங்கத்தில், கேலோ  இந்தியாவிளையாட்டுப் போட்டிகள் இரண்டாவது நாளாக நடைபெற் றது. திங்களன்று மாலை தமிழக ஆடவர்  கூடைப்பந்து அணி யும் சண்டிகர் அணியும் எதிர்கொண்டது. போட்டியின் தொடக் கம் முதலே இரண்டு அணிகளும் தடுப்பு ஆட்டத்தை வெளிப்ப டுத்தியதால், புள்ளிகள்  குறைவாகவே இரு அணிகளும் பெற் றன. மூன்றாவது கால் இறுதி போட்டியில் இரு அணிக ளுமே புள்ளிகள் பெற தீவிர முயற்சி மேற்கொண்டது. முடிவில்  சண்டிகர் அணியைவிட தமிழக அணி 66 புள்ளிகளுடன் முன் னிலை பெற்றது. பரபரப்பாக தொடங்கிய நான்காவது காலி றுதி, பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. போட்டியின் இறுதியில் தமிழக அணி 97 புள்ளிகள் பெற்று  வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடியா சண்டிகர் அணி 73  புள்ளிகள் பெற்று தோல்வியை தழுவியது. தமிழக அணி விளையாடிய இரண்டு கூடைப்பந்து போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.40 லட்சம் பறிமுதல்

கோவை, ஜன.23- அன்னூர் சார் பதிவாளர் அலுவல கத்தில் விடிய விடிய நடந்த சோதனை யில் கணக்கில் வராத 1.40 லட்சம் ரூபாய்  பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், அன்னூர் அருகே நாகமாபுதூர் பகுதியில் சார்பதி வாளர் அலுவலகம் செயல்பட்டு வரு கிறது. இந்த அலுவலகத்தில் பத்திர பதிவு செய்வதில் முறைகேடு நடப்ப தாக தொடர்ந்து கோவை லஞ்ச ஒழிப்பு  துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்த  வண்ணம் இருந்தன. இதனையடுத்து அது குறித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த லஞ்ச ஒழிப்பு துறை அதி காரிகள், திங்கட்கிழமை இரவு அன்னூர்  சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிர டியாக நுழைந்து சோதனையில் ஈடுபட் டனர். கோவை லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ். பி. திவ்யா தலைமையில் 6க்கும் மேற் பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்  அன்னூர் சார் பதிவாளர் அலுவலகத் தில் சோதனை நடத்தினர். அந்த அலுவ லகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற பத்திர பதிவு மற்றும் அதற்கான கட்ட ணம் சரியாக உள்ளதா, லஞ்சம் பெறப் பட்டுள்ளதா என பதிவாளர் அலுவலகத் தில் உள்ள ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு  துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி னர். திங்களன்று இரவு 9 மணிக்கு துவங் கிய இந்த சோதனை செவ்வாயன்று காலை வரை நடைபெற்றது. இந்த சோதனையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத 1.40 லட்சம் ரூபாய் பணம் லஞ்ச  ஒழிப்பு துறை அதிகாரிகளால் கைப்பற் றப்பட்டது. இது குறித்து அன்னூர் சார் பதிவாளரான செல்வ பாலமுருகன் மீது  துறை ரீதியான நடவடிக்கை எடுக்க  லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தி யுள்ளனர்.

ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு விடுமுறை வங்கி முன்பு காத்திருந்த முதியவர் உயிரிழப்பு

சேலம், ஜன.23- ராமர் கோயில் விழாவுக்காக அரைநாள் விடுமுறை அளித்திருந்த நிலையில், வங்கி  முன் காத்திருந்த முதியவர் திடீர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.  அயோத்தியில் ராமர் கோவில் குடமு ழுக்கை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு திங்களன்று  அரைநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், சேலம் மாவட்டம் ஏற்காடு டவுன் பகுதியில் செயல்படும் தேசியமயமாக் கப்பட்ட வங்கி கிளைக்கும் திங்களன்று அரை நாள் விடுப்பு விடப்பட்டிருந்தது. இதனை அறி யாமல் ஏற்காடு மற்றும் சுற்றுப்புற பகுதி யைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் வங்கி யில் திரண்டனர். திங்கட்கிழமை என்பதால், பல்வேறு பண பரிவர்த்தனைக்காக கூட்டம்  நிரம்பி வழிந்தது. அங்கு சிறிய முட்டுச்சந் துக்குள் ஏற்காடு கொண்டையனூர் கிராமத் தைச் சேர்ந்தவர் பழனிசாமி (58) என்பவரும்  வரிசையில் நின்றார். காலை 9 மணி முதல்  நண்பகல் வரையிலும் காத்திருந்த பழனி சாமி, திடீரென மயங்கி விழுந்தார். இதுகு றித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்  முதியவரை பரிசோதித்தனர். அப்போது, அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உறவினர்கள் உடலை வீட் டுக்கு எடுத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ரேசன் கடை கேட்டு மனு

ஈரோடு, ஜன. 23- ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டத்திற்குட்பட்டது அட்டவணை அனுமன்பள்ளி கிராமம். இந்த ஊராட்சியின் வார்டு உறுப்பினர் விஜய்ஆனந்த் மற்றும் அப்பகுதி மக்கள்  ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, அட்ட வணை அனுமன்பள்ளியில் 200க்கும் மேற்பட்டோர் குடும்ப  அட்டைகள் பெற்றுள்ளனர். இவர்கள் தங்கள் வசிக்கும் பகுதி யிலிருந்து, 3 கி.மீ. தொலைவில் உள்ள குடுமியான்பாளை யம் கூட்டுறவு அங்காடிக்கு சென்று ரேசன் பொருட்கள் வாங்கி வர வேண்டிய நிலை உள்ளது. இந்நிலை குறித்து மனு  செய்தோம். அதற்குப் பதிலாக அப்பகுதியில் இலவச மின்சா ரத்துடன், இலவச கட்டடம் வழங்கினால் கடை அமைக்க  நடவடிக்கை எடுக்கப்படும், என கடிதம் மூலம் தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில், தங்கள் பகுதியில் உள்ள கேசவன்  என்பவரது கட்டடத்தை, வாடகையின்றி வழங்க உள்ளோம். உரிய நடவடிக்கை எடுத்து அங்கு அரசு நியாயவிலைக் கடை செய்ய வேண்டும் என கோரியுள்ளனர்.