தாராபுரம், மே 12 - தாராபுரம் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் மரம் விழுந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் வியாழ னன்று இரவு, சூறாவளி காற்றுடன் இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் கடை களில் உள்ள பெயர் பலகைகள் மற்றும் விளம் பரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் காற்றில் பறந்தன. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் தாரா புரம் சர்ச்ரோடு பகுதியில் உள்ள பெரிய புளியமரம், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த காரின் மீது விழுந்தது. இதில் காரின் பின்பகுதி நொறுங்கியது. இதனால் அப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மின்வாரியத்தினர் மீட்பு பணியில் ஈடு பட்டனர். மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. மழையின் போது மின் கம்பங்கள் சேதமானதால் நகரில் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.