முதல் அணுமின் நிலையத்தின் 65 ஆவது ஆண்டு விழா
சென்னை, ஜூலை 10 உலகின் முதல் அணு மின் நிலையம் ஒப்னின்ஸ்க் நகரத்தில் அமைக்கப்பட்ட தன் 65-ஆம் ஆண்டு தினத்தை நினைவுகூறும் வகை யில் ரஷ்யா கொண்டாட்ட த்தில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து ரொசாட்டம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அலெக்ஸி லிகாச்செவ் கூறுகையில், “கடந்த 1954-ஆம் ஆண்டில் ரஷ்யா தான் உலகிலேயே முதன் முறையாக அணு மின் நிலையத்தை அமைத்து சாதனை படைத்தது. தற்போது, அந்த சாதனையை நிகழ்த்தி 65ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் அணு தொழில்நுட்பம் பல்வேறு வகையான பரிணாம வளர்ச்சிகளை எட்டியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் அணு தொழில்நுட்பம் என்பது, பாதுகாப்பானதாகவும், அதிக நம்பிக்கை மற்றும் திறன் வாய்ந்ததாகவும் மாறி யுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு படிப்பினைகளின் மூலம், அணு மின் நிலையங்களில் பல்வேறு பாதுகாப்பு தர விதி முறைகள், சிறந்த உற்பத்தி நடைமுறைகள் அமல்படுத்த ப்பட்டுள்ளன. அணு மின் உற்பத்தி இல்லாமல் இயங்கும் உலகத்தை நம்மால் தற்போது கற்பனை செய்து கூட பார்க்க இயலாத நிலை உருவாகி விட்டது. நடப்பாண்டில் அதிநவீன தலைமுறையைச் சேர்ந்த 3 ப்ளஸ் வி.வி.இ.ஆர்.-1,200 அணு உலைகள் அமைக்க ப்பட்டு மின் உற்பத்தியை அதிகமாகப் பெறும் வகை யிலும், எப்போதும் பாதுகாப்பு நிறைந்ததாகவும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுப்படுத்த ப்பட்டுள்ளது” என்றார்.
சாலை விபத்தில் வாலிபர் பலி
அம்பத்தூர், ஜூலை 10- திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் வசிப்பவர் சிதம்பரம். இவரது மகன் தயாளன் (30). இவர் மணலியில் உள்ள ஒரு ஆயில் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு பணிக்கு வழக்கம் போல் தயாளன் சென்றார். பின்னர் புதன்கிழமை காலை வேலை முடிந்து இரு சக்கர மோட்டர் வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயல் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் பாரி முனையில் இருந்து மளிகைப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சோளிங்கர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி தயாளன் வாகத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தயாளன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து காவல் துறையினர் தயாளன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எஸ்.ஆர்.எம்.மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, சோளிங்கர் மோசூர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கதிர்வேல் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.