districts

திருப்பூர் வாழுமா? வீழுமா? - இன்று வரலாற்று தீர்ப்பு எழுதும் நாள்

“எந்த முக்கியமான விளைவை யும் ஏற்படுத்தாத 20 ஆண்டுகள் கடந்து செல்லக்கூடும். அதேசம யம் ஒரே நாள் நிகழ்வு, அடுத்து 20  ஆண்டு காலத்தை தீர்மானிக்க கூடியதாகவும் வரலாற்றில் நிகழ்வ துண்டு!” இது மாமேதை பிரெடரிக்  ஏங்கல்ஸ் அவர்களின் கூற்று.  அத்தகைய வரலாற்று நிகழ்வுக் கான நாளாக, தமிழகத்தில் வாக் குப்பதிவு நடைபெறும் இந்த ஆண்டு ஏப்ரல் 19 திகழப்போகிறது என்று சொல்வது மிகையல்ல!  திருப்பூரைப் பொறுத்தவரை கடந்த 50 ஆண்டு காலத்தில், தானே  வளர்ந்த, பின்னலாடை தொழிலுக் கென்று தனி முத்திரை பதித்த ஒரு சுயம்பு நகரம். டாலர் சிட்டி, குட்டி  ஜப்பான், வேலைவாய்ப்பு நகரம் என்ற எண்ணற்ற பெயர்களை பெற்ற உழைப்பால் உயர்ந்த நக ரம்.  பல்வேறு சோதனைகளை தாண்டி சாதனை படைத்த நகரம். ஒவ்வொரு முறை நெருக்கடியை சந்தித்தபோதும் அது சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ்  பறவை போல மீண்டு வந்திருக்கி றது. தேநீர் கடைகளில், உணவ கங்களில், தெருச்சந்திகளில் நண் பர்கள் உரையாடும் பொழுது எப்பொழுதுமே திருப்பூர் மீண்டு  விடும் என்ற நம்பிக்கை துளிர்வி டும்!  ஆனால், கடந்த 10 ஆண்டுகால மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு இந்த நகரின் நம்பிக் கையை சிதைத்து விட்டிருக்கிறது. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் பாக கடந்த காலங்களில் பஞ்சு, நூல்  விலை உயர்வு, உள்நாட்டு விற்பனை வரி, சாயப்பட்டறை கழி வுநீர் பிரச்சனைகள், விவசாயம் பாதிப்பு, டிராபேக் குறைப்பு, மின்சாரத் தட்டுப்பாடு, 2004 ஆம் ஆண்டு கோட்டா முறை முடி வுக்கு வந்து உலக வர்த்தக அமைப் பின் முடிவுப்படி திறந்த சந்தை போட்டி, தலை விரித்தாடிய குடிநீர்  பிரச்சனை, அமெரிக்க வீட்டுக் கடன்  நெருக்கடியில் நிதி நிறுவனங்கள் திவால் ஆனது, டெரிவேட்டிவ் எனப்படும் நிதிச் சந்தை சூதாட் டத்தில் சிக்கியது, தொழிலாளர்க ளின் குடியிருப்பு அடிப்படை வச திகள் உள்ளிட்ட வாழ்வாதார நெருக்கடி என சவால்கள் ஒவ் வொரு முறையும் தலை தூக்கி இருக்கிறது.  அவற்றையெல்லாம் கடந்து வந்திருக்கிறது திருப்பூர். பின்ன லாடை பனியன் தொழில் நிற் குமா? நிலைக்குமா? என்ற கேள்வி களை எல்லாம் வெற்றிகரமாக கடந்து வந்து முத்திரை பதித்தி ருக்கிறது. ஆனால் மோடி அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, திருப்பூர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்பது, வேறெங்கோ, ஏதோ ஒரு சூழ்நிலையில் உருவாக் கப்பட்டதல்ல! இந்த நாட்டின் ஆட்சியாளர்களால் நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப் பாக ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, பஞ்சு  நூல் விலை உயர்வை கட்டுப்ப டுத்துவதற் ஒன்றிய அரசு தலை யிட மறுத்தது, வங்கதேசத்துடன் தாராள வர்த்தக ஒப்பந்தப்படி, துணி கள் பின்னலாடைகள் இங்கே  எவ்வித வரைமுறை கட்டுப்பாடு  இல்லாமல் இறக்குமதி செய்யப் பட்டு, உள்நாட்டு பின்னலாடை  தொழில் குறிப்பாக திருப்பூர்  பாதிக்கப்பட்டது ஆகியவை மிகக்  கடுமையான பாதிப்புகளை ஏற்ப டுத்தியது.  ஆனால் பாரதிய ஜனதா  அரசு இந்தப் பிரச்சனைகளில் குறைந்தபட்சம் தொழில்துறை யிடம் காது கொடுத்துக் கூட கோரிக் கைகளை கேட்கவில்லை. பண மதிப்பு நீக்கத்தால் குறு, சிறு, நடுத் தர தொழில்கள் கடுமையாக நலிவை சந்தித்தபோதும் எந்த நிவா ரண நடவடிக்கையும் மேற்கொள் ளவில்லை. ஒவ்வொரு விஷயத்தி லும் ஒன்றிய ஆட்சியாளர்கள் தொழில் துறையினரிடம் பாராமுக மாகவே நடந்து கொண்டிருக்கின்ற னர்.  அதேசமயம் எதார்த்த நிலை மைக்கு புறம்பான புதுப்புது கதைகளை கட்டவிழ்த்துவிட்டு, திசை திருப்புவதில் வல்லவர்க ளாக பாரதிய ஜனதா கட்சியினர் நடந்து கொள்கின்றனர்.  பல்வேறு சவாலான சூழ்நிலை யில் திருப்பூர் வாழுமா? வீழுமா? என்ற கேள்விக்குறியோடு இப் போது நிற்கிறது. மாரிச மான்களாக  வேடம் தரித்து பலர் வலம் வருகின்ற னர். சிக்கலை சந்தித்து வரும் தொழில் துறையினரில் ஒரு சிலரை கொண்டே, திருப்பூரில் பிரச்சனைகள் இல்லை என்பது போல சித்தரிக்கின்றனர்.  இந்த ஏமாற்றுத்தனங்களுக்கு இரையாகாமல், பாஜக ஆட்சியை  வீழ்த்தவும், இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்யவும் வேண் டும். இந்த நாள் திருப்பூரின் எதிர் காலத்தை, இங்கு வாழும் மக்க ளின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய நாளாக இருக்கிறது. இந்தப்  புரிதலுடன் திருப்பூர் மக்கள் திருப் பூரை மீட்பதற்காக தங்கள் வாக்கு களை செலுத்த வேண்டும். மாமேதை ஏங்கல்ஸ் கூற்றுப்படி, அடுத்த 20 ஆண்டுகளில் வர லாற்றை தீர்மானிக்க கூடியதாக ஏப்ரல் 19 இருக்கும்! -வே.தூயவன்