உடுமலை, ஜன.13- பொங்கல் பண்டிகையை வரவேற்கும் வகையில் மார்கழி மாதம் தொடகத்தில் இருந்து பொது மக்கள் ஊர் பொது இடத்தில் மாடுகளுடன் சலங்கைகளைக் கட்டி ஆடுவார் கள். ஒரு கிராமத்தின் வளம், கால்நடை வளத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக் கும் வகையிலும் பாரம்பரிய கலையைப் பாதுகாக்கின்ற னர். இதன்படி பொங்கல் தினத்தன்று, மாடுகள் ஈன்றெ டுக்கும் காளைக் கன்றுகள், ஊருக்குச் சொந்தமானது எனக் கருதப்படுகிறது. மேலும் கன்றுகள் கோவில்களுக்குத் தான மாக வழங்கப்படுகிறது. அதனைத் தத்தெடுக்கும் கிராம மக்கள், அவற்றைச் சலங்கை மாடுகளாக மாற்றுகின்றனர். ஒவ்வொரு கிராமத் தினரும், ஒரு சலங்கை மாட்டைத் தேர்ந்தெடுத்து, ‘சலகெ ருது’ என பெயரிடுகிறார்கள். இந்த கன்றுகள், மார்கழி மாத இரவுகளில், ஊர் பொது இடத்தில், இசைக்குத் தகுந்தாற் போல் ஆடி செல்ல, உறுமி இசைக் கலைஞர் தலைமை யில், கும்மி ஆட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆட்டக்காரர் தனது கைகளில் இரண்டு நீளமான குச்சிகளைக் கையில் ஏந்தி, உறுமி இசைக்கேற்ப காளையின் முன்பு ஆடிச் செல்வர். ஆட் டக்காரரின் ஆட்டத்திற்கு ஏற்றவாறு, தனது தலையை அசைத் தவாறு காளைகள் அவர்களைப் பின்தொடரும். இவ் வாறு, மார்கழி மாதம் முழுவதும், தங்கள் கிராமங்களில் சல கெருது ஆட்டம் நடைபெறும்.இந்த பாரம்பரிய ஆட்டம், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளதால். காணும் பொங்கலை யொட்டி, ஒவ்வொரு கோவிலுக்கும் சலகெருது அழைத்துச் செல்லப்பட இருப்பதால், அதற்கான ஆயத்தப்பணிகள், தற் போது துவங்கியுள்ளது.