districts

img

அடிப்படை வசதிகள் கேட்டு சிபிஎம் மனு

ஈரோடு, டிச.13- அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி ஈரோடு மாநக ராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு நகரச் செயலாளர் பி.சுந்தர ராஜன் தலைமையில், நகரக்குழு உறுப்பினர் சி.முருகேசன் உள்ளிட்டோர் மாநராட்சி ஆணையரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, ஈரோடு மாநகராட்சி, 23 ஆவது வார் டுக்குட்பட்ட தெருக்களுக்கு கான்கிரீட் சாலை அமைக்கப்பட் டுள்ளது. ஆனால், ராஜாஜி வீதியில் மட்டும் விடுபட்டுள்ளது. இதனால், முக்கிய வீதியிலிருந்து இந்த தெரு பள்ளமாகி உள் ளது. மழைக்காலங்களில் தண்ணீர் மற்றும் கழிவுநீர் தேங்கி  மக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. தொற்று நோய்கள் பரவும் ஆபத்தும் ஏற்படுகிறது. எனவே, ராஜாஜி வீதியில் விடுபட்ட தெருவினை சாலை மட்டத்திற்கு கான்க்ரீட் சாலைய மைக்க வேண்டும். தெப்பக்குளம் வீதி வழியாக பெரிய குட்டை செல்லும் வழி, தெப்பக்குளம் கீழ்ப்பகுதி வீதியிலும் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும். தெருநாய்கள் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. பள்ளிக்கும் செல்லும் குழந்தை களை கடிக்க விரட்டுகிறது, சுகாதார நிலையம் அமைக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈரோடு மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.