தருமபுரி, மார்ச் 9- வன்கொடுமை வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்டந்தோறும் தனி நீதிமன்றம் அமைக்க வேண் டும் என அரூரில் நடைபெற்ற கருத் தரங்கில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூரில் வன் கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு யாசட் சங்க தலைவர் க.வசந்த் தலைமை வகித்தார். சமத்துவ வழக்கறிஞர் சங்க மாநில துணைச்செயலாளர் அ. வடிவேலன் வரவேற்றார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர், கலை ஞர்கள் சங்க மாநில பொதுச்செய லாளர் ஆதவன் தீட்சண்யா ஆகி யோர் கலந்து கொண்டு, வன்கொ டுமை தடுப்பு சட்டம் பற்றிய விளக்கவு ரையாற்றினர். இக்கருத்தரங்கில், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குக ளுக்கு விரைந்து தீர்வுகாண மாவட் டந்தோறும் தனி வழக்காடு மன்றம் கொண்டு வர வேண்டும். இச்சட் டத்தை கல்லூரிகள் பாடத்திட்டத் தில் ஒரு பாடமாக கொண்டு வந்து, இளைஞர்கள் மத்தியில் விழிப்பு ணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உடனடியாக நிவார ணம் வழங்குவதுடன், வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். சாதி ஒழிப்பு குறித்து அனைத்து தரப்பு மக்களும் விழிப்ப டையும் வகையில், அனைத்து சமூக மக்கள் அடங்கிய ஜனநாயக சமூக விழிப்புணர்வு குழுக்கள் உருவாக்கி, கிராமங்கள் தோறும் விழிப்புணர் வுவை ஏற்படுத்த வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு உரிய மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட னர். முடிவில், யாசட் சங்க அலுவ லகச் செயலாளர் அ.ராகுல் சித்தார்த் நன்றி கூறினார்.