districts

img

திருப்பூர் பங்குதாரர்கள் கூட்டமைப்பு தொடக்கம்

திருப்பூர், அக். 12 - திருப்பூர் பின்னலாடைத் தொழில் சார்ந்து  செயல்படும் அனைத்து பிரிவினரையும் உள் ளடக்கிய திருப்பூர் பங்குதாரர்கள் கூட்ட மைப்பு தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி யில் உள்ள தனியார் விடுதியில் வியாழக் கிழமை ஏற்றுமதியாளர் சங்க கௌரவத்த லைவர் ஏ.சக்திவேல் தலைமையில் இந்த  கூட்டமைப்பு தொடக்க விழா நடைபெற்றது.  இதில் நெறி சார்ந்த வர்த்தகம் முன் னெடுப்பு எனப்படும் எத்திக்கல் டிரேட் இனிசி யேட்டிவ் அமைப்பின் நிர்வாக இயக்குநர் பீட் டர் மெக் அலிஸ்டர்,  மண்டல இயக்குநர் ரானா அலோக்சிங், ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம், அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் எல்பிஎப் பனியன் சங்கச் செயலாளர் க. ராமகிருஷ்ணன், சேவ் தன்னார்வ அமைப் பின் இயக்குநர் அலோசியஸ் உள்ளிட்டோர் உரையாற்றினர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் பங்கேற்று வாழ்த்திப் பேசினார். திருப் பூர் பங்குதாரர்கள் கூட்டமைப்பு என்பது தனித்துவமான முயற்சி, திருப்பூர் தொழில் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக் கும் என்று கூறினார். இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் தலை வர் வி.இளங்கோவன் வரவேற்றார். ஏற்று மதியாளர் சங்க நிர்வாகிகள், சிஐடியு, ஏஐடி யுசி, எல்பிஎப், எம்எல்எப், ஐஎன்டியுசி, ஏடிபி,  எச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகி கள், தன்னார்வ அமைப்புகள், பிராண்ட் பிரதி நிதிகள், தொழிலாளர் துறை மற்றும் தொழி லக பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஐ.நா.  பெண்கள் பிரிவு பிரதிநிதி உள்பட பல்வேறு  தரப்பினரும் கலந்து கொண்டனர். நிறைவாக  ஏற்றுமதியாளர் சங்கத் துணைத ்தலைவர் ஆர்.ராஜ்குமார் நன்றி கூறினார்.