திருப்பூர், டிச.30- நடப்பாண்டில் பதிவு செய்யப் பட்ட 22 கொலை வழக்குகளில், சம் பந்தப்பட்ட குற்றவாளிகள் அனை வரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என திருப் பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு தெரிவித்தார். திருப்பூர் மாநகர காவல் ஆணை யர் அலுவலகத்தில் சனியன்று காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு செய்தியாளர்களை சந்தித்தார். அப் போது அவர் கூறுகையில், திருப்பூர் மாநகரத்தில் புலம்பெயர் தொழிலா ளர்களை தமிழ் தொழிலாளர்கள் தாக் குவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பட்டன. இதனால், பதற்றமான சூழல் நிலவியது. வதந் திகள் பரப்பியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்க ளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தொடர் குற்ற சம்பவங்க ளில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்யப்பட்டுள்ளனர். 24 வழக் குகளில் சம்பந்தப்பட்ட 41 குற்றவாளி களுக்கு மூன்றாண்டு முதல் ஆறு ஆண்டு வரை தண்டனை பெற்று தந் துள்ளோம். மேலும், இந்த ஆண்டில் 3142 வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனைகள் பெற்று தரப்பட்டுள்ளது. நடப்பாண் டில் 22 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் அனை வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 76 நபர்களை குண்டர் தடுப்பு சட்டத் தில் கைது செய்து சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். 247 கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 216 (87 சதவீதம்) வழக்குகளில் குற்ற வாளிகளை கண்டறிந்து கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட 2 கோடியே 56 லட்சத்து 24 ஆயிரத்து 517 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட் டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்ற செயலில் ஈடு பட்டதாக 85 வழக்குகள் பதிவு செய் யப்பட்டது. இதில் 74 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய் யப்பட்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பல் வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து விபத்துக்கள் கட் டுப்படுத்தும் வகையில் பல்வேறு நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட தன் விளைவாக இந்த ஆண்டு போக் குவரத்து விபத்துகளின் உயிரிழப்பு 10 சதவிகிதம் குறைந்துள்ளது. கண் காணிப்பு கேமராக்கள் கூடுதல் படுத் துவது உட்பட பல்வேறு திட்டங்கள் அடுத்த ஆண்டு செயல்படுத்த திட்ட மிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.